Thursday, December 31, 2009

சசிக்குமார் வாங்கிய படம்



அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக இருக்கும் ஷான்குமார் நடித்த படம் கதை. இப்படத்தை இயக்கியிருப்பது மோகமுள் அபிஷேக்.




மௌனம் பேசியதே, நந்தா ஆகிய படங்களை தயாரித்த ராஜன் ராதாகிருஷ்ணன்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளன் ஒருவனின் வாழ்வில் நடக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்களைதான் இந்த படம் விவரிக்கிறது. கடைசி இருபது நிமிட க்ளைமாக்சை யாராலும் யூகிக்க முடியாது என்றெல்லாம் பந்தயம் கட்டுகிறார்கள் படக்குழுவினர்.
அவரவர் படங்களை அவரவர் போற்றிக் கொள்வது இயல்புதான் என்றாலும், “இவங்க சொன்ன மாதிரி படம் நல்லாதான் இருக்குமோ” என்று திரும்பி பார்க்க வைக்கிறது ஒரு விஷயம். இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக, ஏன், ஒரு விநியோகஸ்தராகவும் வெற்றி பெற்றிருக்கிற சசிக்குமார் இந்த படத்தின் மதுரை ஏரியாவை விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.
இந்த தகவல் கோடம்பாக்கத்தில் பரவியதால், கதை மீது தனி கவனம் செலுத்துகிறார்கள் மற்ற விநியோகஸ்தர்களும். அதற்குள் படத்தில் ஹீரேவாக நடித்திருக்கும் ஷான்குமாருக்கு எராளமான ஆஃபர்களாம்.



நயன்தாராவை முந்தும் சமிரா



தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பிஸியாக இருக்கும் சமீரா ரெட்டி  மலையாளப் படத்தில் முதன் முறையாக நடிக்கிறார்.



மோகன்லால் ஜோடியாக நடிக்கும் இப்படத்துக்கு 'கேசினோவா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மலையாளத்தில் நடிக்க கேட்டதும் முதலில் தயக்கம் காட்டிய சமீரா பெரும் தொகையை சம்பளமாக தர தயாரிப்பு நிர்வாகம் சம்மதம் தெரிவித்ததும் உடனே ஒகே சொல்லி விட்டாராம்.
'பாடிகாட்' படத்துக்கு நயன்தாரா வாங்கிய ரூ.60 லட்சம்தான் மலையாள சினிமாவில் இதுவரை அதிகபட்ச ஹீரோயின் சம்பளமாக இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த சம்பளத் தொகையை முறியடித்து இருக்கிறதாம் சமீராவின் ஒப்புதல்.


Tuesday, December 29, 2009

கவர்ச்சி கஸ்தூ‌ரி

கடந்த சில வாரங்களாக கோடம்பாக்கத்தில் நடக்கும் விழாக்களுக்கு டாணென்று ஆஜராகிவிடுகிறார் நடிகை கஸ்தூ‌ரி. விழா நாயகர்களை படம் பிடிக்கிறார்களோ இல்லையோ, கஸ்தூ‌ரியை வளைத்து வளைத்து படம் எடுக்கிறார்கள். காரணம் அவரது காஸ்ட்யூம்.

உடலின் முக்கியமான இடங்களை மறைப்பதற்கே திணறுகிறது கஸ்தூரி அணிந்து வரும் காஸ்ட்யூம்கள். ‌ரிட்டையர்ட் ஆக வேண்டிய வயதில் இதென்ன வம்பு என்று வாய் பிளக்காதவர்களே இல்லை. அந்த ஆச்ச‌ரியத்து விடை கிடைத்திருக்கிறது.

வேறொன்றுமில்லை, மீண்டும் படங்களில் நடிக்கிறார் கஸ்தூ‌ரி. துரை தயாநிதி தயா‌ரித்திருக்கும் தமிழ் படத்தில் கஸ்தூரிக்கு முக்கியமான வேடமாம். கவர்ச்சியான வேடம் என்று தனியாக கூற வேண்டியதில்லை.

ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அனுபவம் கஸ்தூரிக்கு இருக்கிறது. மீண்டும் ஆடுவதற்கு கஸ்தூரி தயார். தயா‌ரிப்பாளர்கள்தான் கண்டு கொள்வதில்லையாம். அழகழகான பெண்கள் இருக்கையில் ஆ‌ண்ட்டிகளுக்கு வாய்ப்பு கொடுக்க முடியுமா?

அசின் படுக்கையறையில் சல்மான் கான்?!

"சல்மான்கான் எனக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் என்று சொல்வது பொய் பொய் பொய்... இதை இன்னும் எத்தனை தடவை சொல்றது?" என சலித்துக் கொள்கிறார் அசின்.

அசின் மும்பையில் செட்டிலான பிறகு அவரைப் பற்றி பல்வேறு செய்திகளும் வதந்திகளும் வந்தவண்ணம் உள்ளன.

இதில் லேட்டஸ்ட் அவரையும் சல்மான்கானையும் இணைத்து வரும் கிசுகிசுக்கள்தான்.

மும்பையில் அசினுக்காக சல்மான்கான் ஒரு பெரிய வீடு வாங்கித் தந்திருப்பதாகவும், இந்த வீட்டில் அசின் மட்டுமே தனியாக வசிப்பதாகவும் முன்பு கூறப்பட்டது. மேலும் தொடர்ந்து அப்பாவுடன் செட்டுக்கு வருவதையும் சல்மான்கான்தான் தடுத்தார் என்றும் கூறுகிறார்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரி, அசின் படுக்கையறையில் சல்மான்கான் இருந்தார் என்றும் ஒரு பாலிவுட் பத்திரிகை கிசுகிசு எழுத ஆடிப்போனார் அசின்.

நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அசின், "இதற்கெல்லாம் என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்... நான் எத்தனை தடவைதான் மறுப்பு சொல்றது?

சென்னைல பத்திரிகைக்காரங்க எவ்ளோ நல்லவங்க தெரியுமா.. இங்குதான் ரொம்ப மோசம். என் பெட்ரூம்ல சல்மான் இருந்ததை இவங்க பார்த்தாங்களா?

எனக்கு சன்மான் கான் வீடு வாங்கித் தரவில்லை. இது பொய் செய்தின்னு நூறுவாட்டி சொல்லிட்டேன். ஆனா தொடர்ந்து இதையே எழுதறாங்க. அவருக்கும் எனக்கும் காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்ல. மும்பையில் எனக்கு இன்னொரு வீடு இருப்பது உண்மைதான். ஆனா இரண்டுமே நான்தான் வாங்கினேன். என் வசதிக்காக வாங்கினேன். எப்பவும் எங்கப்பா அம்மா கூடதான் இருக்கேன்!" என்கிறார் கொதிப்புடன்.

இருந்தாலும் மீடியா அடங்கவில்லை... நெருப்பில்லாமல் புகையுமா? என் கேளிவிக்குறியோடுதான் அசின் மறுப்பையே வெளியிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!!

அபிஷேக்குடன் அசின்!

அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருந்தார் அசின். ஆனால் அந்தப் பாத்திரத்தில் தனக்கு வெயிட் இல்லை என்று கூறி பின்னர் விலகிக் கொண்டார்.

இப்போது மீண்டும் அபிஷேக்குடன் ஜோடி சேர இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது அசினுக்கு.

இந்தப் புதிய படத்தில் அபிஷேக் ஜோடியாக நடிக்கவிருந்தவர் அவரது ரியல் ஜோடியான ஐஸ்வர்யா ராய். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக, இப்போது அந்த இடத்தை அசினுக்கு கொடுக்க முடிவுசெய்துள்ளனர் படத்தை உருவாக்கும் பர்ஹான் அக்தரும் ரிதேஷ் சிந்த்வானியும்.

"கிட்டத்தட்ட இந்தப் படத்தில் அபிஷேக் ஜோடி அசின்தான் என்பது உறுதியாகிவிட்டது. அபிஷேக்கும் அசினும் நல்ல பொருத்தமான ஜோடிதான். நிச்சயம் பாலிவுட் டைக் கலக்குவார்கள்..." என்கிறது பாலிவுட் மீடியா.

எப்படியோ, அடுத்து எந்தப் படம் செய்வது என்ற ஐடியாவே இல்லாமல் இருந்த அசினுக்கு தானாக வந்திருக்கிறது இந்த வாய்ப்பு. ஜெயிப்பாரா பார்க்கலாம்.

MailPrint ஏ.ஆர். மட்டும்தானா? நாங்களும்தான்...

ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும்தானா? நாங்களும்தான் வெளிநாட்ல போயி மியுசிக் கம்போஸ் பண்ணுவோம்ல... என்று கிளம்பியிருக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ்.

இதற்கு முன்பு சென்னையில இருந்து இசை அமைத்து வந்த ஹரிஸ் ஜெயராஜ் இப்போது லண்டனுக்கு வண்டிபிடித்து கிளம்பி விடுகிறார். கேட்டால் இனிமேல் இசை அமைப்பது அங்கே தான் என்கிறார். இதற்கு முன்பு சமீபகாலமாக இசைப்புயல் தான் இதைப் பின்பற்றி வந்தார். இப்போது ஹரிஸ் இதை பாலோ பண்ணுகிறார் போலும்.

சமீபத்தில் இவர் புக்கான படத்தின் இசையை இங்கேயே வைத்து போட்டுத்தருமாறு சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். ஆனால் அதை மறுத்துவிட்ட ஹரிஸ் ஜெயராஜ், ‘லண்டனுக்கு வாங்க....’ என்று சொல்ல வேறு வழியில்லாமல் இயக்குநனரும் அவரது உதவியாளர்களும் லண்டனுக்கு பயணித்திருக்கிறார்கள். தன் சொந்தச் சொலவில் போனாலாவது பரவாயில்லை. தயாரிப்பாரின் செலவில் இவர்கள் போவதால் தயாரிப்பாளர் பட்ஜெட்டில் பாதி இதற்கே கரைந்து விடுகிறது என்று முணுமுணுக்கின்றனர் சிலர்.

கேட்க வேண்டியவர்களுக்கு கேட்டால் சரி...!

MailPrint ஏ.ஆர். மட்டும்தானா? நாங்களும்தான்...

ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும்தானா? நாங்களும்தான் வெளிநாட்ல போயி மியுசிக் கம்போஸ் பண்ணுவோம்ல... என்று கிளம்பியிருக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ்.

இதற்கு முன்பு சென்னையில இருந்து இசை அமைத்து வந்த ஹரிஸ் ஜெயராஜ் இப்போது லண்டனுக்கு வண்டிபிடித்து கிளம்பி விடுகிறார். கேட்டால் இனிமேல் இசை அமைப்பது அங்கே தான் என்கிறார். இதற்கு முன்பு சமீபகாலமாக இசைப்புயல் தான் இதைப் பின்பற்றி வந்தார். இப்போது ஹரிஸ் இதை பாலோ பண்ணுகிறார் போலும்.

சமீபத்தில் இவர் புக்கான படத்தின் இசையை இங்கேயே வைத்து போட்டுத்தருமாறு சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். ஆனால் அதை மறுத்துவிட்ட ஹரிஸ் ஜெயராஜ், ‘லண்டனுக்கு வாங்க....’ என்று சொல்ல வேறு வழியில்லாமல் இயக்குநனரும் அவரது உதவியாளர்களும் லண்டனுக்கு பயணித்திருக்கிறார்கள். தன் சொந்தச் சொலவில் போனாலாவது பரவாயில்லை. தயாரிப்பாரின் செலவில் இவர்கள் போவதால் தயாரிப்பாளர் பட்ஜெட்டில் பாதி இதற்கே கரைந்து விடுகிறது என்று முணுமுணுக்கின்றனர் சிலர்.

கேட்க வேண்டியவர்களுக்கு கேட்டால் சரி...!

கதாநாயகன் மேலே விழுந்த குதிரை...

கும்ப மேளா மாதிரி ‘கும்பல் மேளா’ நடத்துவதில் தமிழ் சினிமாவுக்கு நிகர் அதுவேதான். ஆக்ஷன் படம் ஏதாவது நன்றாக ஓடினால் அதன்பின் வருகிற படங்கள் எல்லாம் ரத்த கறையோடுதான் வரும்.

லேடீஸ் சப்ஜெக்ட் படம் ஓடுகிறதா? திபு திபுவென்று அது மாதிரி கதைகளின் பின்னாலேயே ஓடுவார்கள். ஆனால் தனக்கென்று தனி ஸ்டைலை மேற்கொள்கிற இயக்குனர்கள் ஒரு சிலரே. இம்சை அரசன் 23ம் புலிகேசி மூலம், தமிழ்சினிமாவின் பழைய ட்ரென்ட்டை மீண்டும் துணிச்சலாக புதுப்பித்தவர் சிம்புதேவன்.

அவரது லேட்டஸ்ட் படம் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். தமிழ்சினிமா மறந்தே போய்விட்ட கௌபாய் ஸ்டைல் படத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் சிம்பு. இதற்காக அவர் மெனக்கட்டது கொஞ்ச நஞ்சமல்ல. ரெஃபரன்ஸ் தேடி அவர் அலைந்ததையே தனி கதையாக படம் பிடிக்கலாம் போலிருக்கிறது. அதுபோகட்டும்...

படத்தில் நடிக்கிற லாரன்ஸ், லட்சுமிராய், சந்தியா, பத்மப்ரியா ஆகியோருக்கும் இது புது அனுபவம்! புது லொக்கேஷன், புதிய ஸ்டைலில் ஆடைகள் என்று கடந்த சில மாதங்களாக வேறொரு உலகத்தில் வாழ்ந்தார்களாம் அத்தனை பேரும். அவுட்டோர் ஷ§ட்டிங்கில் ஒளிப்பதிவாளர் அழகப்பனுக்குதான் திண்டாட்டம் என்றார் சிம்புதேவன். நடிகர் நடிகைகள் அனைவருக்கும் தோல் ஆடைகள்தான் காஸ்ட்யூம். வெயில் அதிகம் அடித்தால் அவர்கள் வெந்து போய்விடுவார்கள். லைட்டிங் இல்லையென்றால் அழகப்பன் வெந்து போய்விடுவார். இதையெல்லாம் மீறிதான் படத்தை அழகாக எடுத்துக் கொடுத்திருக்கிறார் என்றார் சிம்புதேவன்.

“முதல் நாள் படப்பிடிப்பில் குதிரை மீது ஏறினேன். அது என் மேல் விழுந்துவிட்டது” என்றார் லாரன்ஸ். அந்த குதிரை மீது எந்த ஹீரோயின் இருந்தாரோ?

பொங்கலுக்கு மோதப்போகும் படங்கள்

சினிமா ரசிகர்களுக்கு இந்தப் பொங்கல் தித்திப்பான பொங்கலாக அமையவிருக்கிறது. ஆனால் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் பாவம்... அவர்களுக்கு எந்தப் படமும் இல்லை.

பொங்கல் ரேஸில் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கோவா’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘ஜக்குபாய்’, ‘குட்டி’ ஆகிய படங்கள் மோதுகின்றன. இந்த படங்கள் அத்தனையும் ஒன்றுக்கொன்று சளைக்காதவை என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம்.

‘கோவா’ படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருக்கிறார் ‘சரோஜா’ டீம் நடித்துள்ளது. எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள விஷால் நடித்து வெளிவரும் படம் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’. ‘ஜக்குபாய்’ சரத்குமார் - ஸ்ரேயா நடித்துள்ள படம். தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வரும் தனுஷ் நடித்து வெளிவரும் படம் ‘குட்டி’. இந்தப் படங்களில் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கோவா’ ஆகிய இரண்டு படங்களும்தான் எதிர்பார்ப்பில் இருக்கின்றன.

தனுஷின் ‘குட்டி’ படம் எப்படி இருந்தாலும் ஓடிவிடும்.. காரணம் தொடர்ந்து வரும் தனுஷின் வெற்றி, இது மட்டுமின்றி இந்தப் படத்தை வெளியிடுவது சன் பிக்சர்ஸ். பின்னே கேட்கவா வேண்டும். ஆயிரத்தில் ஒருவனுக்கும் கோவாவுக்கும்தான் பெரும் போட்டி நடக்கும் என்று தெரிகிறது.

இந்த ரேஸில் ஜெயிப்பது யார் என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்...

Monday, December 28, 2009

'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து!

ரஜினி மேடை, கமல் மேடை, கலைஞர் மேடை... இப்படி மேடைக்கேற்றபடி நெளிவு சுளிவுடன் பேசுவதில் பிஎச்டி வாங்கியவர் வைரமுத்து. ஆளுக்கேற்ப பேசுவதிலும் அசகாய சூரர்.

நேற்று நடந்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மேடையில், நடிகைகளை அவர் வர்ணித்ததைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்களே நெளிய வேண்டி வந்ததாம். நம்ம வைரமுத்துவா என்று சிலர் சற்றே முகம் சுளிக்கவும் செய்தார்களாம்.

எல்லோரும் கௌபாய் கதையைத் தேர்வு செய்த சிம்புதேவனைப் பாராட்டிக் கொண்டிருக்க, கவிஞர் வைரமுத்து மட்டும் நடிகை லட்சுமிராயை உச்சத்தில் வைத்துப் புகழ்ந்து தள்ளினார்.

அவர் பேசுகையில், "லட்சுமிராய் இந்த படத்தில் குதிரையில் ஏற்றமெல்லாம் செய்திருக்கிறார். உண்மையில் அந்த குதிரை கொடுத்து வைத்த குதிரை... இப்படி ஒரு வாய்ப்பு எந்தக் குதிரைக்கு கிடைக்கும்" என்ற ரீதியில் பேச, அதனைக் கேட்டு லட்சுமிராய் நெளிந்தபடி சிரித்து வைத்தார்.

இதில் ஹைலைட்டான விஷயமே, விழா முடிந்ததும் அனைவரிடமும் விடைபெற்றுச் சென்ற வைரமுத்து, தனது காரிலேயே லட்சுமிராயை கூட்டிச் சென்றதுதான்.

வைரமுத்துவின் காரும் கொடுத்து வைத்ததோ!

அபிஷேக்குடன் அசின்!

அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருந்தார் அசின். ஆனால் அந்தப் பாத்திரத்தில் தனக்கு வெயிட் இல்லை என்று கூறி பின்னர் விலகிக் கொண்டார்.

இப்போது மீண்டும் அபிஷேக்குடன் ஜோடி சேர இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது அசினுக்கு.

இந்தப் புதிய படத்தில் அபிஷேக் ஜோடியாக நடிக்கவிருந்தவர் அவரது ரியல் ஜோடியான ஐஸ்வர்யா ராய். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக, இப்போது அந்த இடத்தை அசினுக்கு கொடுக்க முடிவுசெய்துள்ளனர் படத்தை உருவாக்கும் பர்ஹான் அக்தரும் ரிதேஷ் சிந்த்வானியும்.

"கிட்டத்தட்ட இந்தப் படத்தில் அபிஷேக் ஜோடி அசின்தான் என்பது உறுதியாகிவிட்டது. அபிஷேக்கும் அசினும் நல்ல பொருத்தமான ஜோடிதான். நிச்சயம் பாலிவுட் டைக் கலக்குவார்கள்..." என்கிறது பாலிவுட் மீடியா.

எப்படியோ, அடுத்து எந்தப் படம் செய்வது என்ற ஐடியாவே இல்லாமல் இருந்த அசினுக்கு தானாக வந்திருக்கிறது இந்த வாய்ப்பு. ஜெயிப்பாரா பார்க்கலாம்.

டிரான்ஸ்பரண்ட் ஸ்ரேயா...

கந்தசாமி படத்தை துவங்கிய போது இரண்டு கிராமங்களை தத்தெடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு. அப்படத்தின் 100 வது நாள் விழாவின் போது இந்த இரண்டு, முப்பதானது!

விழாவையே தேனிக்கு அருகில் உள்ள அந்த இரண்டு கிராமங்களில்தான் நடத்த வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார் அவர். ஆனால், வானிலை காரணமாக திட்டத்தில் மாற்றம். கிராம மக்களில் சுமார் ஐநூறு பேரை சென்னைக்கே வரவழைத்திருந்தார் தாணு. நடிகர் சங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் திரும்பிய இடத்திலெல்லாம் வேட்டியும், கண்டாங்கி சேலையுமாக நடமாடினார்கள் மக்கள்.

வழக்கமாக திரையுலக பிரபலங்கள்தான் படத்தின் நடித்த நடிகர் நடிகைகளுக்கும், டெக்னீஷியன்களுக்கும் ஷீல்டு கொடுப்பார்கள். இங்கே வித்தியாசம். வந்திருந்த கிராம மக்களே ஷீல்டுகளை வழங்கினார்கள்.

உள்ளேயிருப்பதெல்லாம் வெளியே தெரிகிற மாதிரி புடவை அணிந்து வந்தார் ஸ்ரேயா. காதில் பப்படம் ஆட, கையில் ஒரு கதராடையுடன் வந்த மூதாட்டி ஒருவர், ஸ்ரேயாவை அப்படியே அந்த ஆடையால் போர்த்தினார். (ஹ¨ம், அநீதி பொறுக்காத கிழவி...) கிராம மக்களிடம் தனது அன்பை ரொம்பவே தெரிவித்த ஸ்ரேயா, ஒவ்வொரு முறை அவர்கள் மற்றவர்களுக்கு ஷீல்டு கொடுக்க வரும்போது கூட எழுந்து நின்று போஸ் கொடுத்தது ஆச்சர்யம்.

“இதுதான் சரி. இவங்க கொடுக்கிற ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்தான் லட்சங்களாகவும் கோடிகளாகவும் எங்க பாக்கெட்டுக்கு வருது. நியாயமாக இவங்கதான் ஷீல்டு கொடுக்கணும். இதை செய்த தாணுவுக்கு என் நன்றி” என்றார் பாக்யராஜ். டெக்னீஷியன்களுக்கு மட்டுமல்ல, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவிஐபிகளுக்கும் இந்த கிராம மக்களே பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்கள்.

இந்த விழாவின் நெட் ரிசல்ட்? கந்தசாமியைதான் தத்தெடுத்துக் கொண்டது கிராமம்!

அசினை சுற்றி ரசிகர்கள் முற்றுகை; ஷாருக்கான் மீட்டார்

மும்பையில் தனியார் அமைப்பு நடத்திய விழா ஒன்றில் இந்தி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். முக்கியஸ்தர்கள் மேடைக்குவர தனி வழி ஏற்பாடு செய்து இருந்தனர்.

அசின் தாமதமாக வேறு பாதையில் வந்தார். அங்கு ரசிகர்கள் நின்று கொண்டிருந்தனர்.அசினை பார்த்ததும் அவரை நோக்கி ஓடினார்கள். விழா ஏற்பாடு செய்தவர்கள் யாரும் இல்லை.

அசினை முற்றுகையிட்ட ரசிகர்கள் நடிப்பை புகழ்ந்தனர். சிலர் அத்துமீறி உடம்பை தொட்டனர். கையை பிடித்தும் இழுந்தார்கள். சுமார் 300 பேர் அசினை சுற்றி நின்றார்கள். பின்னால் நின்றவர்கள் முண்டியடித்து வர முயன்றதால் முன்னால் நின்றவர்கள் அசின் மேல் விழுந்து அமுக்க பார்த்தார்கள். அவர்களிடம் மாட்டிக்கொண்டு தவித்தார் அசின்.

அப்போது அந்த வழியாக ஷாருக்கான் வந்தார். அவர் அசின் ரசிகர்கள் பிடியில் சிக்கியதை கண்டு அதிர்ந்தார். உடனடியாக தன்னுடன் வந்த பாதுகாவலர்கள் எட்டு பேரை அனுப்பி அசினை மீட்க உதவினார். அவர்கள் கூட்டத்தினரை தள்ளி விட்டு அசினை சுற்றி அரண்போல் கைகோர்த்து நின்றனர்.

ஷாருக்கான் பாய்ந்து போய் அசின் கையை பற்றி இழுத்து மேடைக்கு அழைத்து சென்றார். ஷாருக்கான் பொதுகாவலர்கள் கூட்டத்தினர் மத்தியில் வி.ஐ.பி.க்களை எவ்வாறு அழைத்து செல்வது என்பதில் விசேஷ பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேடைக்கு வந்தபின் நீண்ட நேரம் ஷாருக்கனும் அசினும் பேசிக்கொண்டு இருந்தனர்.

பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பாதுகாப்புக்கு இரண்டு செக்யூரிட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஷாருக்கான் ஆலோசனை கூறினார். அதை அசின் ஏற்றுக்கொண்டார்.

அ‌ஜித்துக்கு எதி‌ரிகளில்லை

ஆளுக்கு தகுந்தபடி பாடல் எழுதுவதில் கவிப்பேரரசு வைரமுத்து திறமையானவர். சூழலுக்கு ஏற்பவும் அற்புதமாக எழுதுவார்.

விஜய், அ‌ஜித் மோதல் உச்சத்தில் இருந்தபோது அ‌ஜித்துக்கு இப்படி எழுதினார். “இமயத்தில் என் கொடி பறந்தால் உனக்கென்ன, எனக்கொரு நண்பனாக இருக்கவும் உனக்கு தகுதியில்லை...”

மோதி விளையாடு படத்தில் சரணின் எதி‌ரிகளை மனதில் வைத்து, உன்னை எதிர்ப்பவன் நிர்வாணமாக நிற்பான் என்று எழுதினார். இதை மேடையில் கவிப்பேரரசே தெ‌ரிவித்தார்.

அசல் படத்துக்கும் கவிப்பேரரசுதான் பாடல். சமீபத்தில் இவரது பாடல் ஒன்றை ஏவிஎம்-மில் படமாக்கினர். அ‌ஜித்துடன் ஆடியவர் பாவனா. பாடல் இப்படி தொடங்குகிறது.

அதி‌ரி புதி‌ரி பண்ணிக்கடா
எதி‌ரி உனக்கு இல்லைடா...

பாடல் நெடுக தல-யின் புகழை கவிப்பேரரசு வார்த்தையாக்கியிருக்கிறார். பிரமாண்ட அரங்கில் அதைவிட பிரமாண்டமாக எடுத்திருக்கிறார் சரண்.

இரண்டு வ‌ரிகளிலேயே பாடல் பட்டையை கிளப்பும் என்பதை யூகித்துவிடலாம்.

சைக்கிளில் வரும் தனுஷ்...

'பட்டணம்தான் போகலாமடி' பாட்டு பழசாகியிருக்கலாம். ஆனால் அந்த 'மெட்டை' புதுசாக்கியிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். 'குட்டி' படத்தில் இப்பாடலை வேறொரு பரிமாணத்தில் அழகாக்கியிருக்கிற அவர்.

இப்படத்தின் ஆடியோ ரிலீசுக்காக சென்னைக்கு வந்திருந்தார். தனது பாடல், திரையில் காட்சியாக விரியும் போது கிடைக்கிற சந்தோஷத்தை அவர் ரசித்ததை நாமும் ரசித்தோம்.

இப்பாடலுக்கு மேக்னா நாயுடுவும் தனுஷீம் ஆடியிருக்கிறார்கள். ஓடும் ரயிலில் இந்த ஜோடி போட்டிருக்கும் ஆட்டத்தை பார்த்திருந்தால், பக்கத்தில் வந்த சரக்கு ரயிலே கூட தடம் புரண்டிருக்கும். அப்படியரு கெட்ட ஆட்டம். 'யாரடி நீ மோகினி' படத்திற்கு பிறகு மித்ரன் ஜவகர் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. இதையடுத்து இன்னொரு படத்தையும் தனுஷை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் ஜவகர். "இந்த 'பயாலஜி' எப்படி சார்?" என்றால், "இது ஒன்றும் திட்டமிட்டு நடந்தது இல்லைங்க. அதுவா அமைஞ்சது" என்கிறார்.

படத்தை பற்றி நிறைய பேசிய மித்ரன் சொன்ன ஒரு தகவல், சிக்கனமானது. விசேஷமானது. ரசனையானது. ரகளையானதும் கூட. வேறொன்றுமில்லை, இதில் கல்லூரி மாணவராக நடித்திருக்கும் தனுஷ் கல்லு£ரிக்கு சைக்கிளில் வருவது போல காட்சிகளை அமைத்திருக்கிறாராம். பொதுவாக தங்கள் ஆதர்ஷ ஹீரோவை போலவே நடை, உடை, பாவனை, பைக் என்று அலையும் இளசுகள், இனிமேல் சைக்கிளில் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை!

நயன்தாராவுக்கு நாமம்?

வேட்டையாடு விளையாடு, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் இப்படி நான்கு தொடர் ஹிட் கொடுத்த லேட்டஸ்ட் நாயகன் கமல்!

இவரைப்போலவே தொடர் ஹிட் பார்ட்டி நம்ம தனுஷ். பொல்லாதவன், திருவிளையாடல், படிக்காதவன், யாரடி நீ மோகினி! இதுதான் தனுஷின் ஹாட் லிஸ்ட்.

ஒரு ஹிட் கொடுத்தாலே ஒரு கோடியை ஏற்றிக் கொடுக்கும் தமிழ்சினிமாவில், இந்த தொடர்ஹிட் இருவரையும் ராசாதி ராசாவாக்கியிருக்கிறது. இவர்களுடன் ஜோடி சேர ஒரே போட்டா போட்டி. அதிலும், கமலை விட வயதில் மிக மிக சிறியவரான தனுஷிடம் ஜோடி போட கெஞ்சும் அதே நடிகைகள், கமலுடனும் ஜோடி போட அலைவதுதான் கனவுலகத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதிலும் நயன்தாராவுக்கும் தமன்னாவுக்கும் மறுபடியும் ஒரு நேரடி போட்டி. குருவியில் துவங்கிய இந்த போட்டி, இப்போது கமலிடமும் தொடர்வதுதான் லேட்டஸ்ட் லடாய். மர்மயோகியில் விட்டதை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்ற முயற்சியில் இறங்கிவிட்டாராம் த்ரிஷா. இந்திக்கு போய் விட்டாலும், நாற்பதே நாளில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.
தனக்காக நாற்பது நாட்கள் பொறுத்திருக்க சொல்கிறாராம். கே.எஸ்.ரவிகுமார், கமல் இருவரும் பொறுத்திருந்தால் நயன்தாராவுக்கு வழக்கம் போல நாமம்தான்!

விஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்!

சிறுத்தையை வேட்டையாடுவதுதானே வேட்டைக்காரனின் வேலை? ஆனால் சினிமா சிறுத்தையை அதே சினிமா வேட்டைக்காரன் கொன்று விட்டானே... என்று புலம்பல் சத்தம் கேட்கிறது கோடம்பாக்கத்தில்.

அரசல் புரசலாக ஆரம்பித்தாலும் நேரடியாக மேட்டருக்கு வருவோம். 'சிறுத்தை' என்ற படத்தை கார்த்தி, சூர்யா சகோதரர்களின் உறவினரான ஞானவேல் என்பவர் தயாரிக்க முடிவானது. இவர்தான் 'பருத்தி வீரன்' பட தயாரிப்பாளர். இதற்காக 'விக்கிரமார்குடு' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ரைட்சை வாங்கி வைத்திருந்தார்களாம் இவர்கள்.

'வேட்டைக்காரன்' படத்தை மற்றவர்களை போலவே ஆர்வமாக பார்க்க கிளம்பிய சகோதரர்களுக்கு ஆத்திரமான ஆத்திரமாம். வேட்டைக்காரனில் வந்த பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் 'விக்கிரமார்குடு' படத்தின் சீன்களை தழுவி அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படி படத்திலுள்ள சரக்கையெல்லாம் உருவி விட்டால் மிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதாம்? இதுதான் சகோதரர்களின் கோபத்திற்கு காரணம்.
இப்படி 'உருவி' கதை பண்ணிய இயக்குனரை விட்டு விட்டு விஜய்யை குறை சொல்வானேன்? என்று இன்னொரு புறம் சமாதானம் செய்து கொண்டார்களாம் அதே அண்ணன் தம்பிகள். சினிமா கோபம் சில நிமிடங்கள்தானே நீடிக்கும்...

நமீதாவின் தெலுங்கு படம்

தமிழில் நடிப்பதை விட தெலுங்கில் அள்ளிக் கொடுப்பார்கள் என்று நினைத்த நமீதா சமீபத்தில் ஓசைப்படாமல் தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் தமிழுக்கும் வருகிறது, ‘இதுதாண்டா சட்டம்’ என்னும் பெயரில். பணபலம் அதிகார பலம் கொண்ட ராமசாமி ரெட்டி, தன்னம்பிக்கை, தைரியம் கொண்ட ராஜசேகர், அவரை பிடித்தே தீருவேன் என்று அலையும் போலீஸ் அதிகாரியான தம்பி... கவர்ச்சி புயல் நமீதா இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களாகப் பின்னப்பட்டுள்ளது இந்தப் படத்தின் கதை.

கோடி ராமகிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ராஜசேகர் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நமீதா களம் இறங்கியுள்ளார். இவர்களுடன் நாசர், ரியாஸ்கான், கே.ஆர்.விஜயா, தலைவாசல் விஜய், ராமிரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான கோடி இராமகிருஷ்ணாவின் அடுத்த இயக்கத்தில் பிரமாண்ட தயாரிப்பாக வெளிவருகிறது இந்த படம்.

தமிழில் நடிப்பதை விட, தெலுங்கில் எக்கச்சக்க கவர்ச்சி மழை பொழிந்துள்ளாராம் நமீதா.

சத்தியமா அது நான் இல்லை : பிரியாமணி

விட்டால் பிரியாமணியின் பெயரை பிகினி பிரியாமணி என்றே மாற்றி வைத்து விடுவார்கள் போலும். சமீபத்தில் ப்ரியாமணி பிகினி உடையில் வருவது போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகின.

இதைப் பார்த்து பதறிப் போன பிரியாமணி ‘அது சத்தியா நான் இல்லைங்க... என்னோட முகத்தை வேறு ஒரு உடம்பில ஒட்டி மார்பிங் பண்ணி அந்த போட்டோவைப் போட்டிருக்காங்க... அதை நம்பாதீங்க...’ என்று அழாத குறையாக சொல்கிறார். ‘கதைக்குத் தேவையாக இருந்தால் பிகினி என்ன எனிமியைக் கூட போடலாம் தான். நான் பிகினியில வந்திருந்தா அது என்னோட படம்தான்னு அடிச்சு சொல்லியிருப்பேன்... ஆனா, இந்த படங்கள் எல்லாம் வெறும் டூப்புங்க’ என்கிறார் இந்த பிகினி அம்மணி (?). ஐஸ்வர்யாராய், பிபாஷா பாசு, மல்லிகா ஷெராவத் இவங்க எல்லாருமே பிகினி டிரஸ் போட்டிருக்காங்க நான் போட்டா என்ன தப்பு என்பதும் அம்மணியின் ஆதங்கம்.

அதானே...!

கன்னிப் பெண்ணாக சாக விரும்பவில்லை! : நீத்து சந்திரா

நிச்சயம் நான் ஒரு கன்னிப் பெண்ணாக சாகமாட்டேன் என்கிறார் பிரபல நடிகை நீத்து சந்திரா.

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளையில் படுகவர்ச்சியாக நடித்து வரும் நீத்து, சமீபத்தில் ஒரு இந்திப் படத்துக்காக லெஸ்பியன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில்கள்தான் இப்போது பாலிவுட்டில் படுசூடான சமாச்சாரமாகிவிட்டது.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய நீத்து, "படத்துக்காகத்தான் இந்த வேஷம். நிஜத்தில் அப்படியில்லை. ஒரு லெஸ்பியனாக என் வாழ்க்கை கழியாது. கன்னிப் பெண்ணாகவே செத்துப் போகவும் மாட்டேன். என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் செய்கிறேன். கவலை வேண்டாம்" என்று கூற,

"அதுபற்றி நியாயமாக நீங்கள்தான் கவலைப் படணும், எங்களுக்கு ஒரு கவலையுமில்ல" என்றனராம் நிருபர்கள் குறும்புடன்.

கன்னிப் பெண்ணாக சாக விரும்பவில்லை! : நீத்து சந்திரா

நிச்சயம் நான் ஒரு கன்னிப் பெண்ணாக சாகமாட்டேன் என்கிறார் பிரபல நடிகை நீத்து சந்திரா.

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளையில் படுகவர்ச்சியாக நடித்து வரும் நீத்து, சமீபத்தில் ஒரு இந்திப் படத்துக்காக லெஸ்பியன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில்கள்தான் இப்போது பாலிவுட்டில் படுசூடான சமாச்சாரமாகிவிட்டது.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய நீத்து, "படத்துக்காகத்தான் இந்த வேஷம். நிஜத்தில் அப்படியில்லை. ஒரு லெஸ்பியனாக என் வாழ்க்கை கழியாது. கன்னிப் பெண்ணாகவே செத்துப் போகவும் மாட்டேன். என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் செய்கிறேன். கவலை வேண்டாம்" என்று கூற,

"அதுபற்றி நியாயமாக நீங்கள்தான் கவலைப் படணும், எங்களுக்கு ஒரு கவலையுமில்ல" என்றனராம் நிருபர்கள் குறும்புடன்.

சன் பிக்ஸர்ஸ் சார்பில் வெளியான வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய, வர்ணிக்க முடியாத அளவு, மெகா வெற்றிப் படமாக அமைந்துள்ளதாகவும், இப்படி ஒரு வெற்றிப் படம் தந்ததற்காக ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி என்று விஜய் கூறினார்.

வேட்டைக்காரன் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இது பெரும் வெற்றிப் படம் என்று தயாரிப்பாளர், வெளியீட்டாளரான சன் பிக்ஸர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று சன் பிக்ஸர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் வீட்டுக்கு நடிகர் விஜய்யும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரனும் விசிட் அடித்தனர்.

கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து கொடுத்து, "இப்படியொரு பிரமாண்ட வெற்றிப் படம் அமையக் காரணமாக இருந்ததற்கு நன்றி" என்று கூறினார் விஜய்.

பின்னர் அளித்த பேட்டியில், "வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். இனி அவர் தனது படிப்பை கவனிக்க வேண்டும். நடிப்பு அப்புறம்தான்.

இந்த சந்தோஷமான நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்" என்றார்.

வேட்டைக்காரன் மெகா ஹிட் : விஜய் சந்தோஷத்தில்

சன் பிக்ஸர்ஸ் சார்பில் வெளியான வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய, வர்ணிக்க முடியாத அளவு, மெகா வெற்றிப் படமாக அமைந்துள்ளதாகவும், இப்படி ஒரு வெற்றிப் படம் தந்ததற்காக ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி என்று விஜய் கூறினார்.

வேட்டைக்காரன் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இது பெரும் வெற்றிப் படம் என்று தயாரிப்பாளர், வெளியீட்டாளரான சன் பிக்ஸர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று சன் பிக்ஸர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் வீட்டுக்கு நடிகர் விஜய்யும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரனும் விசிட் அடித்தனர்.

கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து கொடுத்து, "இப்படியொரு பிரமாண்ட வெற்றிப் படம் அமையக் காரணமாக இருந்ததற்கு நன்றி" என்று கூறினார் விஜய்.

பின்னர் அளித்த பேட்டியில், "வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். இனி அவர் தனது படிப்பை கவனிக்க வேண்டும். நடிப்பு அப்புறம்தான்.

இந்த சந்தோஷமான நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்" என்றார்.

குட்டை பாவாடை நடிகை கலகலத்த பிரஸ்மீட்

நடிக்க ஆசைப்பட்ட ஏழாவது நாளிலேயே ஒரு படத்தில் ஹீரோவாகிற அதிர்ஷ்டம் யாருக்கு வாய்க்கும்? ‘அப்பாவி’ ஹீரோவுக்கு வாய்த்திருக்கிறது அந்த அதிர்ஷ்டம்.

லயோலா கல்லூரியில் இரண்டாமாண்டு விஷீவல் கம்யூனிக்கேஷன் படித்து வருகிற கவுதமுக்குதான் இப்படியொரு லக்கி பிரைஸ். சுமார் 300 மணி நேரம் (விட்டு விட்டுதான் பாஸூ) இவரை நடிக்க வைத்து ஒரு மினி ஷீட்டிங்கே நடத்தி முடித்தாராம் படத்தின் இயக்குனர் ரகுராஜ். இப்படி ஒரு திட்டமிடலோடு துவங்கிய படம் நாம் பார்க்கப் போகிற இரண்டரை மணி நேரத்தோடு முடியப்போவதில்லை. மொத்தம் மூன்று பாகங்களாக இந்த படம் வெளிவரப்போகிறது. முதல் பாகத்தைதான் இப்போது படமாக்கி வருகிறாராம் ரகுராஜ்.

“இது ஒரு வித்தியாசமான படம். நாங்கள்ளாம் ஒரு குடும்பமா பழகினோம் என்றெல்லாம் எல்லா படத்தின் பிரஸ்மீட்டிலேயும் சொல்லியிருப்பாங்க. நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். நாங்க பாட்டுக்கு வருவோம், நடிப்போம். அவ்வளவுதான். குடும்பம்னு சொல்றதெல்லாம் ஹம்பக். அதை விடுங்கள்... நீங்க நினைக்காத ஒரு படமா இது இருக்கும். அப்பாவி ரிலீஸ் ஆன பின் தமிழ்நாட்டில் எல்லார் மனசிலும் ஒரு ஃபயர் உருவாகியிருக்கும்” என்கிறார் ரகுராஜ்.

தமிழ்சினிமாவின் மூன்று முன்னணி நாயகர்களில் ஒருவரிடம் இந்த கதையை சொன்னாராம். அவரும் பிரமிப்பாக கேட்டுவிட்டு, பிரமாதம் என்று சிலாகித்தாராம். இந்த கதையை நாம கண்டிப்பா எடுக்கிறோம். அதுக்கு முன்னாடி நீங்க ஒரு படத்தை இயக்கி புரூஃப் பண்ணிட்டு வாங்க என்றாராம். அதுவரைக்கும் இந்த கதையை வைத்துக் கொண்டு காத்திருப்பதை விட ஒரு புதுமுகத்தை வைத்து எடுக்கலாம் என்று இறங்கிவிட்டார் ரகுராஜ்.

தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து எக்ஸ்பீரியன்ஸ் ஆன சுஹானிதான் இப்படத்தின் ஹீரோயின். அவரது எக்ஸ்பீரியன்ஸ் எவ்வளவு ‘உயர்வானது’ என்பதை அவர் அணிந்திருந்த குட்டை பாவாடையே சொன்னதுதான் ஹாட்!

Friday, December 18, 2009

Worth to watch,100% Logical Entertainment

VETTAIKARAN MOVIE REVIEW

Starring: : Vijay, Anushka.
Direction: Babu Sivan
Music: Vijay Anthony
Production: AVM

Vettaikaran 
The sparkling stunts, the fiery punch lines, the signature lighter moments and some foot tapping numbers, everything that makes a Vijay film worth your time in theaters are there in his latest offering Vettaikaran. But then, every film of Ilaya Thalapathi has all these things, you might ask. Yes, but it is the execution that makes each one different from the other and the question as you enter theaters to watch this movie is whether newcomer Babu Sivan has managed to pull the formulaic one man army theme out of the rut that it has recently fallen into.

The storyline is very familiar to anyone who follows Vijay movies. A small town do-gooder (Vijay) idolizes an honest super cop of his town. The cop is merciless against all evil forces, an encounter specialist who doesn’t believe in arrests and judicial procedures; he just guns down the perpetrators. The small town do-gooder wants to emulate this cop. But, the only problem facing him is that to become an IPS officer, one must first pass out of school and then get a graduate degree. His failure at academics is an irritant to his father, quite understandably. Keeping his eventual dream in mind, he somehow gets over the hurdle and heads to the big metropolis (Chennai) to seek  his graduation and the IPS dream. Chennai, expectedly, greets to him a) good college education b)part time employment and c)a heinous goon whose crime rate is like no one that he has seen before. The rest is all about the mission to eradicate evil. How does he do it? Does he become an IPS officer and bring them to law or does he become a force on his own, hunting them down like the title of the movie suggests? Find out in theaters. And yes, there is a love story in the midst of all this which you are bound to notice because of the songs.

After hearing the synopsis one might be excused for branding this another stereotype fair. But, this one is better than that. Yes, it is undeniably a full fledged commercial flick with a lot of heroism and related stuff, but there is also a certain level of finesse in the execution. The first half is a whole lot of fun. Vijay puts on a jolly and youthful demeanor which has worked very well. Along with Sathyan, they create many an enjoyable moment. The scenes on the train journey, where Vijay meets Anushka for the first time, have really come out well. It is the second half where the predictability starts to set in. A few clichés later, like the hero’s transformation in the duration of a song, you almost know where the film is heading. The script, which remained alright for most parts, looks unduly stretched during the final portions, the end could definitely have been crisper.

The film, in spite of its flaws and stereotypes, is bound to click with Vijay fans. The main reason for that is the seemingly rejuvenated Vijay on screen. He looks refreshed, energetic and lends zing to the proceedings on screen. His dance moves have not lost any of their sheen, the opening number ‘Naan Adicha’ is a cracker that will surely be lapped up by his fans. Junior Vijay’s act towards the end of this number is very likeable. The ‘karigalan’ song too looks and sounds very good while ‘Puli Urumuthu’ is the typical one that catalyses the transformation of the protagonist. Besides these, the other songs don’t gel well into the narrative which is a drawback. The highly anticipated Vijay-Anushka chemistry does not provide any spark on screen which disappoints. Surprisingly, Anushka does not look as ravishing as usual and she also does not get much footage in the film other than songs. It is a bit of downer for the actress after the Arundhathi high.

Other performances live up to the requirements of the script. Sathyan, along with Vijay, makes the first half work with his comic acts. Saleem Ghouse is the typical bad man while VMC Haneefa leaves a mark in his small role. Sukumari shows her experience in the portions given to her and Sayaji Shinde is in full form as a cop loyal to the evil master. Babu Sivan must be commended on a good effort, thought not without its flaws. He has handled the dialogue department with care and come out with good results. Action is a regular Vijay style and will cater to his fans.
Vettaikaran is an out and out Vijay film, straight to his fans who are bound to be happy with the outcome, considering the last two offerings which did not please many. A fun first half and an action packed but predictable and a bit jaded second make a pretty reasonable final product for all those who don’t mind commercial mass masala without caring for things such as reason or logic.

Verdict: Worth to watch,100% Logical Entertainment
Rank:x x x [out of 5]



Thursday, December 17, 2009

Vettaikaran Review by Members,Vettaikaran Movie Review

Review from our Vijay Fan - Aravind Kuwait

Source:http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=433110&tid=5416112300431400476&na=4&nst=1&nid=433110-5416112300431400476-5416217664567916172

flm kewl macha...logic elaam sothapaama paarthu irukaaga...comedy scenes ar kewl though some r irritatin...thalaivar dance n his chemistry wit anoushka is really awesome...compared 2 villu dis is 1000 times better da...sure hit...inga kuwait la sema terror aa irunchu...i didnt miss d chennai flavour...vijay intro thaarumaaru...flm a yaarum de promote panalanaa surely it l b a blockbuster...nother ghilli typ success is on cards 4 our vijay...:|

athuku ila macha already its 2 late here...no issues da...i dnt wana spoil d hype bein created thr...apdiyae poyu paarunga...convey dis 2 deepak lso...i bet dat yu wnt b disappointed dis tym...thalaivar intro kaagavae flm thirumba thirumba paarkalaam...k macha...gtg gdnyt cya 2mrw...pls scrap me bout d celebrations thr in our place aftr its release n its opinion wit d ppl thr...


Yakubu, its a 6 AM show in Ambattur Rakki.... MASS theatre..

Vettaikaran, will be another Thirumalai in Vijays Career.. At the time of Thirumalai release too, fans were in kolai verri to make the movie a grand success, as few of his earlier movies did not set box office on fire and as usual the media dogs, were targetting Vijay..

Vethanaikappuram varum Vetri yeppavumae Tharu mara irrukumm...

I am damn positive abt Vettaikaran..
3:31 am (3 hours ago)
ப்ரியமுடன் ÿãkµß
kalakkurom .. na evening show poren.. porampokku pasanga inga morning show lam poda maatenguraanga..
3:38 am (3 hours ago)
hari nair
i have seen vettaikaran 2 times here in bahain....it wil be a massive block buster movie of this yr.....it wil be a Badsha for vijay.....thalaivar's comedy,dance everythng is good....screen play and direction is good....really awesome
3:40 am (2½ hours ago)
PREM - VETTAIku
Ok Ghillis,

Ciao.. will update our Balaji Sridharan, with Vettaikaran as when possible during the course of the movie... Will be moving straight to Albert after that, for the first 3 shows there..

I am sure, its going to be gala time in the community today.. 100% Vettaikaran will be a smash hit..

Dec 18th.. The day of MASS....

Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran ReviewVettaikaran ReviewVettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran ReviewVettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review 

wwww.latesttamilmp3songs.com 

Sunday, December 13, 2009

கவர்ச்சியாக நடிப்பது அலுப்பு தட்டுகின்றது : நேஹா தூபியா

அதீத கவர்ச்சி யுடன் நான் இருப்பதே எனக்கு எதிராகப் போய் விட்டது என்று கூறியுள்ளார் நேஹா தூபியா.

ஷாருக்கானும், செக்ஸும்தான் பாலிவுட் டில் நல்ல விலை போய்கிறது என்று கூறி முன்பு பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் நேஹா. தான் கவர்ச்சியாக நடிப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கவர்ச்சியாக நடிப்பது அலுப்பு தட்டுவதாக கூறியுள்ளார் நேஹா. அதீத கவர்ச்சியாக தான் இருப்பதே தனக்கு எதிராக போய் விட்டதாக சலிப்புடன் கூறுகிறார் நேஹா.

முன்னாள் மிஸ் இந்தியாவான நேஹா கயாமத், ஜூலி படங்களில் பிரமாண்டக் கவர்ச்சியுடன் கலக்கியவர். தான் சீரியஸ் ரோல்களில் நடித்தும் கூட கவர்ச்சிகரமான கேரக்டரில்தான் என்னை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்கின்றனர் என்கிறார் நேஹா.

செக்ஸி என்ற வார்த்தையையே நான் வெறுக்க ஆரம்பித்துள்ளேன். அந்த அளவுக்கு அது எனக்கு எதிராக போய் விட்டது என்று கூறும் நேஹா, நான் நல்ல கேரக்டர்களில் நடித்துள்ள மித்யா, சிங் இஸ் கிங், மகாரதி ஆகியவற்றை மக்கள் மறந்து விட்டனர். இது வருத்தமாக இருக்கிறது என்கிறார்.

ரஹ்மான் சகோதரியின் இசை

ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரைஹானா ஒரு இசை அமைப்பாளர் என்றாலும் பிஸியானவர் இல்லை. இவருக்கு எப்போதாவது ஒரு படம் வரும். அந்தப் படமும் அநேகமாக பட்ஜெட் படமாகத்தான் இருக்கும்.

ஆஹா ஓஹோ என்று ஓடுகிற படமாகவும் இருக்காது. இதனால் இவருடைய பெயரும் கொஞ்சம் பிரகாசமாக இல்லைதான். இப்போது இவர் ‘பேசுவது கிளியா’ என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் எய்ட்ஸ் நோயின் பாதிப்புகளையும் அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிற படம். இதனாலேயே இந்தப் படத்திற்கு உடனடியாக இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார் ரைஹானா. இந்தப் படத்தில் விருட்சிகா என்ற பெண் பாடலாசிரியர் ஒருவரும் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

இந்தப் படம் குறித்து அதன் இயக்குநர் கௌரி சங்கர் ‘எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் நட்பு கரம் கொண்டு அவளை அரவணைக்கும் நண்பர்களையும் மையப்படுத்தி இப்படத்தை இயக்கியுள்ளேன்’ என்கிறார்.

பிரகாசமாக ஒளிருமா ‘ஆயிரம் விளக்கு’

சாந்தனுவும் சத்யராஜூம் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘ஆயிரம் விளக்கு’. இந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் எஸ்.பி.ஹோசிமின்.

இவர் ‘பிப்ரவரி 14’ என்ற மொக்கையான படத்தை எடுத்தவர். சமீபகாலமாக படம் இல்லாமல் சுருண்டு கிடந்தவருக்கு இப்போது ஒரு வாய்ப்பு. இந்தப் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிப்பவர் ஷானாகான். இவர் ஏற்கனவே சிம்புவுடன் ஜோடி போட்டவர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

சாந்தனுவை இந்தப் படத்தின் கேரக்டருக்கு ஏற்றார்போல் மாற்றிவிட்டாராம் இயக்குநர். அப்படி என்ன கேரக்டர் என்று கேட்டால் ‘அதெல்லாம் சஸ்பென்ஸ்...’ என்று பொடி வைக்கிறார்.

என்னமோ போங்கப்பா... ஆயிரம் விளக்கு.... பிரகாசமாக எரிஞ்சா சரி...!

ஆர்.கே. நடத்தும் ஸ்னூக்கர் போட்டி

தொழிலதிபரான ஆர்.கே. ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு ஓடியதைத் தொடர்ந்து, ‘அழகர்மலை’ படத்திலும் ஹீரோவாக நடித்தார்.

அடுத்து இயக்குநர் பி.வாசு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் ஆர்.கே. இவர் சமீபத்தில் ‘வாங்க சாப்பிடலாம்’ என்ற உணவகத்தை சென்னை தியாகராய நகரில் தொடங்கினார். இந்த உணவகத்துடன் இணைந்த விஐபி ஆக்ஸஸ் கிளப் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தையும் நடத்தி வருகிறார்

ஆர்.கே. இங்குள்ள வி.ஐ.பி. அக்ஸஸ் கிளப்பில் சர்வதேசத் தரம் கொண்ட ஸ்நூக்கர் அரங்கு அமைத்துள்ளார். இந்த அரங்கில் விஐபி மேட்ரிக்ஸ் ஆல் இந்தியா இன்விடேஷன் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.. போட்டியில் வெல்லும் வீரருக்கு முதல் பரிசாக ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இரண்டாவது வீரருக்கு ரூ. 90,000மும் அரையிறுதி வரை வரும் வீரருக்கு ரூ 50000-மும், காலிறுதிப் போட்டி வரை வரும் வீரர்களுக்கு ரூ 25000-மும் பரிசாக வழங்கப்படும்.

வரும் டிசம்பர் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஒரு வாரம் நடக்கும் இந்த போட்டியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்னூக்கர் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

பா படம்... ரஜினி விருப்பம்

பா படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யும் அளவு உணர்வுப்பூர்வமான படம். குறிப்பாக தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியுள்ளார்.

சென்னையி்ல் நேற்று முன்தினம் பா திரைப்படத்தைப் பார்த்தார் ரஜினி. அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோரும் இந்தப் படம் பார்த்தனர்.

படம் பார்த்து விட்டு, கருத்து தெரிவித்த ரஜினி, "அமிதாப் எப்போதுமே அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்து வந்துள்ளார். மொழிகளைத் தாண்டி இந்தப்படம் பெரும் வரவேற்பைப் பெறும். குறிப்பாக தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும்" என்றார்.

இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் நீங்கள் நடிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, "அதுபற்றி இப்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது" என்றார் ரஜினி.

ரஜினி நடித்தால் கண்டிப்பாக அது 'சூப்பர் பா'..!

Saturday, December 12, 2009

டைட்டானிக் இயக்குநரின் அடுத்த படம்

‘டைட்டானிக்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் காமரூன் இயக்கிய படம் ‘அவதார்’. இந்தப் படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 14 வருடங்களுக்கு முன்பே ஜேம்ஸ் காமரூன் உருவாக்கிய கதை இது.

ஒரு கிரகத்தில் மரம் செடி, கொடிகள் அனைத்தும் தான் நினைத்த உருவத்தை உடனே மாற்றும் வல்லமை பெற்றவையாக இருக்கின்றன. அங்கு வாழும் உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் போராடுகிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்காக பூமியில் இருந்து கதாநாயகன் புறப்படுகிறான்.

இவர்கள் அனைவரும் யாரை எதிர்த்துப் போராடுகிறார்கள்? ஏன் போராடுகிறார்கள்? அவர்களுக்கு உதவப் போன ஹீரோவின் நிலை என்ன இப்படிப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் கற்பனைக்கும் எட்டாத விதத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது அவதார் படம். இந்தப் படத்தை டிவென்டியத் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

வேட்டைக்காரன்... ஈழத் தமிழர்கள் போர்க்கொடி!

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.

இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்.

சொன்னதை செய்த த்‌ரிஷா

மும்பையில் செட்டிலான பிறகு தென்னிந்தியா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை அசின். தமிழில், தெலுங்கில் கால்ஷீட் கேட்டதற்கும் நோ ரெஸ்பான்ஸ்.

ஆனால் இதெல்லாம் லண்டன் ட்‌‌ரீம்ஸ் வெளியாவதற்கு முன்பு. படம் பப்படம் ஆனதால் புதிய படம் எதிலும் அசினை ஒப்பந்தம் செய்ய யோசிக்கிறார்கள். விளைவு?

கலைமாமணி விருது வாங்க சென்னை வந்தவர் அப்படியே சில முக்கிய புள்ளிகளிடம் தமிழில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். விஜய்யின் 51 வது படத்தில் அவர்தான் ஹீரோயின் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

அசினின் நிலை தனக்கு வரக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் த்‌ரிஷா. இந்தியில் நடிப்பதால் தென்னிந்திய மொழிகளில் நடிக்க மாட்டேன் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என அவசர அவசரமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

தமிழில் ஆடுகளம், தெலுங்கில் பிருந்தாவனம் படங்களை மறுத்தவர் திடீரென்று தெலுங்கில் கோபி இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதில் ஹீரோவாக நடிப்பவர் ரவி தேஜா. கிருஷ்ணா படத்தின் வெற்றிக்குப் பிறகு த்‌ரிஷா, ரவி தேஜா ஜோடி சேரும் படமிது.

பறப்பதை நம்பி இருப்பதை இழக்க‌க் கூடாதில்லையா... விரைவில் த்‌ரிஷாவின் தமிழ்ப்பட அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம்.

‌ரிஸ்க் எடுக்கும் ஜனநாதன்

பேராண்மை வெற்றிக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் மீதான எதிர்பார்ப்பு அதிக‌ரித்திருக்கிறது. ச‌ரித்திர‌க் காதல் கதையை இயக்குகிறாரா? இல்லை புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கிறாரா? முடிவு தெ‌ரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

காரணம், ச‌ரித்திர காதல் அல்லது புதுமுகங்களை வைத்து பிரமாண்டமாக ஒரு படம். இந்த இரண்டில் ஒன்றை இயக்குவதாக கூறியிருந்தார் ஜனநாதன்.

திடீர் திருப்பமாக தனது அடுத்தப் படத்தை தானே தயா‌ரிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஜனநாதன். தயா‌ரிப்பாளர் தலையீடு இல்லையென்றால் நினைத்தபடி படத்தை இயக்கலாம் என்பதே இதற்கு காரணம்.

ஒரு படம் இயக்கியவர்களே தயா‌ரிப்பாளர் ஆகும்போது, ஜனநாதன் டூ லேட். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டான படம் தருவார் என்று உறுதியாக நம்பலாம்.

பாட்டு ஒரே பாட்டு... நயன்தாராவே நிப்பாட்டு!

“அட்வைஸ் சொல்றவங்க அப்பால போங்க...” நயன்தாராவின் இந்த துடுக் பேச்சால் நமக்கெதுக்கு என்று ஒதுங்கிக் கொண்டார்கள் அவருக்கு நெருக்கமான அட்வைசர்கள்.

அவிழ்த்து விட்ட கன்னுக்குட்டிக்கு தொட்டின்னு தெரியுமா? பட்டின்னு புரியுமா? துள்ளி ஓடி தொட்டியிலே விழுந்த மாதிரி தப்பு தப்பாக முடிவெடுப்பதாக புலம்புகிறார்கள் அந்த நெருக்கமானவர்கள்.

லேட்டஸ்ட் புலம்பல் இது. “யாரையும் கேட்காமலேயே கோவா படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதிச்சாரு. சரி போகட்டும் என்று விட்டால் இப்போது மீண்டும் ஒரு படம். எப்படிதான் புரியப் போவுதோ” என்கிறார்கள். மாப்பிள்ளை படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறாராம் நயன்தாரா. “இப்படியே அவரு முக்கியம், இவரு முக்கியம்னு ஆட ஆரம்பிச்சா நயன்தாராவுக்கு போட்டியா ரகசியாதான் வந்து நிப்பாரு” என்று அழாத குறையாக சொல்கிறார்கள் அவர்கள். போகட்டும்... இன்னொரு சங்கதி.

முதல்வர் கையால் வழங்கப்பட்ட கலைமாமணி விருதை வாங்க ஏன் வரவில்லை என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் நயன். அந்த விருது வழங்கப்பட்ட நாளில் இவர் வெளிநாட்டில் இருந்தாராம். படப்பிடிப்பை விட்டு விட்டு வர இயலாது என்பதால்தான் வராமல் இருந்துவிட்டாராம்.

பாலிவுட்டில் முருகதாஸ்

கஜினி மூலம் சூர்யாவுக்கு வாழ்வு கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ், அதன் பின்பு இவர் இயக்கப் போகும் தமிழ் படத்திலும் சூர்யாதான் ஹீரோ.

இன்னும் சில மாதங்களில் துவங்கப்படுவதாக இருந்த இந்த படத்திட்டத்தில் திடீர் ஸ்பீட் பிரேக்கர்! 2010 இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம் படப்பிடிப்பு.

அதுவரைக்கும் வெட்டி மேடைகளில் குட்டிக் கதையா பேசிக்கொண்டிருக்க முடியும்? எப்பவுமே தனக்கு ரத்தின கம்பளத்தை வைத்துக் கொண்டு காத்திருக்கும் இந்தி ஏரியாவுக்கு போய்விட்டார் முருகதாஸ். சல்மான்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் புதிய படத்தை இயக்க போகிறாராம். தெலுங்கில் வெளிவந்து வசூலை வாரிக்குவித்த கிக் படத்தின் ரீமேக்தான் இது.

அறிமுகப்படுத்திய இயக்குனரான தன்னை அம்போவென்று விட்டுவிட்டு பாலிவுட் ஹீரோக்களின் புகழ் பாடிக் கொண்டிருந்த அசின் மீது ஏக கடுப்பில் இருந்த முருகதாஸ், வாய்ப்பிருந்தும் வலியவே மறுத்துவிட்டாராம் அசினை. பேசி கெடுவது ஒரு டைப் என்றால், பேசாமல் கெடுவது இன்னொரு வகை போலிருக்கிறது.

தன்ஷிகாவுக்கு மளமளவென படங்கள்

‘பேராண்மை’யில் ஐந்து பெண்களில் ஒருவராக வந்து நடிப்பில் நின்று முத்திரை பதித்தவர் தன்ஷிகா. இவர் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.

பேராண்மையின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு மளமளவென படங்கள் புக் ஆக ஆரம்பித்தன. இப்போதைக்கு இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தன்ஷிகா மேலும் கதைகளைக் கேட்டு வருகிறார்.

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘மாஞ்சா வேலு’ படத்திலும் வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு நடிக்கும் நில் கவனி செல்லாதே படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

‘படங்களில் ஒப்பந்தம் ஆவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல... நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதனால்தான் கதைகளை கேட்டு, அலசி ஆராய்ந்த பின்னரே ஓ.கே. சொல்கிறேன்...’ என்று சொல்லும் தன்ஷிகா மேலும் நான்கு படங்களுக்கு இம்மாதம் இறுதிக்குள் கால்ஷீட் கொடுத்து விடுவேன் என்கிறார்.

ரஜினிக்கு 60வது பிறந்த நாள்

நடிகர் ரஜினி யின் 60வது பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் கோலாகலமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் ரஜினிக்காக சிறப்புப் பிரார்த்தனைகளும் பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அன்னதானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தனது பிறந்த நாளின்போது வழக்கமாக வெளியூர் சென்றுவிடும் ரஜினி இம்முறை சென்னையில் தான் இருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், தனது பிறந்தநாளை வீட்டிலேயே மிக அமைதியாக தியானம், வழிபாடு என சிம்பிளாக முடித்துக் கொண்டார் ரஜினி. வெளி நபர்கள் யாரையும் இன்று அவர் சந்திக்கவில்லை.

நயன்-ஆர்யா நாகரிகம்

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. தன்னுடன் நடிக்கும் நடிகைகளை நெருக்கமான வட்டத்திற்குள் இழுத்துக் கொள்வது அவருக்கு கைவந்த கலை.

 பூஜாவை இறுக அணைத்தபடி போஸ் கொடுப்பார். நிலாவை உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு பேட்டியளிப்பார். கேட்டால் நட்பு என்பார். அந்த நட்பு பாலம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை போலிருக்கிறது நயன்தாரா விஷயத்தில்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடிய ஆர்யா, கேக்கை நயன்தாரா வாயில்தானே ஊட்டியிருக்க வேண்டும்? ஆனால் வெட்டிய கேக்கை டீசண்ட்டாக அவர் முன் நீட்டினார். அவரும் அதை வாங்கி தானே சுவைத்துக் கொண்டார். பதிலுக்கு தானும் ஒரு கேக்கை எடுத்து ஆர்யா கையில் கொடுத்து அன்பை தெரிவித்தார் நயன். இப்படி பட்டும் படாமலும் பர்த் டே ஃபங்ஷன் நடந்தாலும், நெருக்கமான காதல் காட்சிகளில் நீந்தி விளையாடி இருக்கிறார்களாம் இருவரும்.

கொஞ்ச நாட்களாக சென்னை படப்பிடிப்பை தவிர்த்து வரும் நயன், மீண்டும் தனது கெடுபிடிகளை குறைத்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினியுடன் மீண்டும் நடிக்க ஆசை : ஸ்ரேயா

ரஜினியின் 60வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து நடிகை ஸ்ரேயா, மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க விருப்பமும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயா தனது வாழ்த்துச் செய்தியில், ரஜினி யிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இளைய தலைமுறை நடிகர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி.

இப்போது இருப்பதுபோல் அவர் எப்போதும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்.

அதற்கான வாய்ப்பை அவர் தான் ஏற்படுத்தித் தர வேண்டும். அவருடன் மீண்டும் எத்தனை படங்களிலும் வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Wednesday, December 9, 2009

Vettaikaran New Trailer - 4

Vettaikaran Trailer - 3

Vettaikaran Trailer-2

Vettaikaran Trailer

Monday, December 7, 2009

MailPrint தனுஷ் ஜோடியாக ஜெனிலியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புக்காக சுமார் பத்து லட்சம் செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் படப்பிடிப்பை டி.ஆர். வரதராஜன் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்ய, ராம்குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ரெடி என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பெயரிடப்படாத இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்கிறார். ரெடி தெலுங்குப்படத்திலும் ஜெனிலியாதான் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
175 நாட்கள் ஓடிய யாரடி நீ மோகினி வெற்றிப்படத்தைத் தொடர்ந்து, தற்போது தனுஷ் நடிக்கும் குட்டி படத்தை இயக்கி வரும் மித்ரன் கே.ஜவஹர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக தனுஷ் உடன் இணைகிறார் மித்ரன் கே.ஜவஹர். இதன் மூலம் ஒரே ஹீரோவை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவராகிறார் இவர்.
தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் பாலாஜி ஸ்டூடியோஸ் பிரைவேட் லிட் பேனரில் மோகன் அப்பாராவ், ரமேஷ் தாண்ட்ரா தயாரிக்கிறார்கள்.
சந்திரமுகி, கில்லி, சிவாஜி போன்ற படங்களைப்போல் பல கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமானமுறையில் இப்படத்தைத் தயாரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார்கள்.

நமீதாவின் திடீர் முடிவு

வெயிட்டான கேரக்டர்கள் இல்லாவிட்டாலும் வெயிட்டான நமீதான சமீபகாலமாக பல படங்களில் வந்து போவது வழக்கம். ஜெகன்மோகினி படத்திற்குப் பிறகு நமீதா ஒரு முடிவெடுத்திருக்கிறாராம். அது, இனிமேல் உப்பு சப்பில்லாத கேரக்டர்களில் வெறுமனே கவர்ச்சியாக வந்து போகக் கூடாது என்பதுதான். இதனால் அவருக்கு சமீபகாலமாக வந்த பத்துக்கும் மேற்பட்ட வாய்ப்புகளை அவர், உதறித்தள்ளியிருக்கிறார். முன்பு கவர்ச்சியான வேடங்களை எதிர்பார்த்த நமீதா இப்போது கவர்ச்சியுடன் வெயிட்டான கேரக்டராக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் மனதில் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்து விட்டாராம். எனவே, அதற்கு ஒரே வழி நல்ல கதை உள்ள படங்களில் நடிப்பது தான் என்பதைப் புரிந்து கொண்டாராம். கதை சொல்லப் போகும் இயக்குநர்களிடம் இப்போது கதையை முழுவதுமாக கேட்டு விட்டு தன்னுடைய கேரக்டர் பற்றி குறுக்குக் கேள்விகள் கேட்பதால் நமீதாவிடம் கதை சொல்லப் போகும் இயக்குநர்கள் கிலி பிடித்துக் கிடக்கிறார்கள்.

கருணாஸ் நடிக்கும் பௌர்ணமி நாகம்

யார், யுகா படங்களை எடுத்த இயக்குநர் யார் கண்ணன் இப்போது பொளர்ணமி நாகம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் கருணாஷ் மற்றும் ஆதித்யா மேனன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க அவர்களுடன் மயில்சாமி, நளினி, நிழல்கள் ரவி, நெல்லை சிவா என ஒரு பெரிய டீமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.
இது இப்படி இருக்க இன்னொரு ஹைலைட்டான விஷயம் இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை முமைத்தான் இரட்டை வேடங்களில் நடித்து, கெட்ட ஆட்டமும் போட்டிருக்கிறாராம். அதுவும் கருணாசுடன் முமைத்கான் இணைந்து ஆடியிருக்கிறாராம். இதை ஒரு பக்கம், பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லியே பப்ளிசிட்டி தேடிக் கொண்டிருக்கிறார் கருணாஸ். இந்தப் படத்தின் கதை பற்றி யார் கண்ணனிடம் கேட்டால், ‘ஒரே மாதத்தில் ரெண்டு பௌர்ணமி வருகிறது, முதலில் வரும் பௌர்ணமியில் நடக்கும் ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களை திகிலில் உறைய வைக்கும்...’ என்று பயமுறுத்துகிறார். இந்தப் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் எஸ்.ஏ.ராஜ்குமார். இசையும் படும் மிரட்டலாக இருக்குமாம்.

மிரட்டுறதுக்குன்னே படம் எடுக்கிறாங்கப்பா...

ப்ளேபாய் விஷால்

சத்யம், தோரணை ப்ளாப் படங்களைக் கொடுத்த பிறகு விஷால் கவனமாக கதையைக் கேட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார் போலும். இப்போது அடுத்து அவர் களம் இறங்கியிருப்பது தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில். இந்தப் படத்தில் இவர் ப்ளே பாய் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் செம ரொமான்ஸாக இருக்குமாம். இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் ''யாவரும் நலம்'' படத்துல நடிச்ச நீது சந்திரா, மிஸ் இண்டியா 2007 சாரா ஜெயின் தவிர மூன்று புதுமுகங்களும் அறிமுகம் ஆகிறார்களாம். தாமிரபரணி படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் யுவன் ஷங்கர் ராஜாவும் விஷாலும் இணைகிறார்கள். ஐந்து பாடல்கள். அத்தனையும் அற்புதமாக வந்திருக்கிறதாம். இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் விஷாலின் அண்ணன்.

கம்யூட்டர் நிறுவன அதிபரை ரகசியமாய் மணந்த சுவாதி!

நடிகை சுவாதி, கம்யூட்டர் நிறுவன அதிபரை ரகசியமாக மணந்தார். கடந்த நவம்பர் 22ம் தேதி நடந்துள்ளது அவர்கள் திருமணம் . நேற்றுதான் தகவல் தெரிந்தது.
விஜய் ஜோடியாக 'தேவா' படத்தில் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து விஜய்யுடன் 'வசந்த வாசல்', 'செல்வா' படங்களிலும், அஜீத் ஜோடியாக 'வான்மதி' படத்திலும் நடித்தார். சமீபத்தில் வெளியான 'யோகி' படத்தில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 45 படங்களில் சுவாதி நடித்துள்ளார்.
வர்ஜீனியாவில் கம்ப்யூட்டர் நிறுவன இயக்குனராக இருக்கும் கிரண் என்பவரை ரகசிய திருமணம் செய்துள்ளார் சுவாதி.
இவர்களின் திருமணம், கடந்த நவம்பர் 22ம் தேதி, ஹைதராபாத்தில் ரெட்ஹில்ஸ் பகுதியிலுள்ள மாருதி கார்டனில் நடைபெற்றுள்ளது. இதில் இருவீட்டு உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இருவரும் நேற்று தம்பதி சமேதராக திருப்பதி கோயிலில் சாமி கும்பிட்டனர்.
அப்போது திருமணம் குறித்து சுவாதி கூறுகையில், "இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த திருமணம் இது. குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால், திரையுலகை சேர்ந்தவர்களை திருமணத்துக்கு அழைக்க முடியவில்லை.
யோகி என்னுடைய கடைசி படம். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். கணவர் கிரணுடன் இம்மாத இறுதியில் வர்ஜீனியாவில் குடியேற உள்ளேன்' என்றார்.

பத்மலட்சுமி மீண்டும் நி்ர்வாண போஸ்!

கர்ப்பமாக இருக்கும், சல்மான் ருஷ்டியின் மாஜி மனைவி பத்மா லட்சுமி ஒரு பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொணட்வர் மாடல் பத்மா லட்சுமி. தற்போது இவர் 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். சல்மான் ருஷ்டியின் மனைவியான இவர் கடந்த 2007ம் ஆண்டோடு ருஷ்டியை விட்டுப் பிரிந்து விட்டார்.
இந்த நிலையில், பேஜ்சிக்ஸ் என்ற பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். முழங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இந்த போஸ் உள்ளது.
இவர் மாடலிங்குக்காக நிர்வாண போஸ் தருவது இது முதல் முறையல்ல என்றாலும கர்ப்பமாக இருக்கும்போதும் மாடலிங் போஸ் தந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பத்திரிகையின் உள்பக்கம் இடம் பெற்றுள்ள இன்னொரு புகைப்படத்தில், மைலி சைரஸ் வானிட்டி பேர் பத்திரிகைக்கு கொடுத்த குஜால் போஸை காப்பி அடித்து அதேபோல போஸ் கொடுத்துள்ளார் பத்மா.
இதுகுறித்து பத்மா கூறுகையில், நிர்வாணத்தின் போது நான் அழகாக இருப்பதாக உணர்கிறேன். உடைகள் அணிந்திருக்கும் போது அதற்கு ஒரு பெயர் வந்து விடுகிறது. ஆனால் நிர்வாணம் அப்படியல்ல. நம்மை அப்படியே வெளிக்காட்டும் முக்கிய குறியீடாக நான் கருதுகிறேன். நிர்வாணத்தின் மூலம் மட்டுமே நம்மை அப்படியே வெளிக்காட்ட முடியும் என்கிறார்.
39 வயதாகும் பத்ம லட்சுமி, தனது தற்போதைய வாழ்க்கை குறித்து கூறுகையில், எனது வாழ்க்கையை மீண்டும் ஆக்கப்பூர்வமான பாதையில் செலுத்திக் கொண்டு வருகிறேன். என்னைப பொறுத்தவரை நான் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.
சரி பத்ம லட்சுமியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் தந்தை?. அந்தக் கேள்விக்கு பத்மா லட்சுமியே இன்னும் பதில் அளிக்கவில்லை, பிறகு சொல்கிறேன் என்று கூறிச் சிரிக்கிறார்!.

மம்முட்டி ஜோடி ஸ்ரேயா!

ரஜினி, விஜய், விக்ரம் என ஒரு பெரிய ரவுண்ட் முடித்த ஸ்ரேயா, இப்போது மலையாளத்தில் திறமை காட்டச் சென்றுள்ளார்.
தனது முதல் படத்திலேயே அவர் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டியுடன் நடிக்கிறாராம். இதில் இன்னொரு ஹீரோவும் உண்டு. அவர் பிருத்வி ராஜ். படத்துக்கு தலைப்பு போக்கிரி ராஜா!

புதிய இயக்குநர் வைசாக் இயக்கும் இந்தப் படத்துக்கு 30 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் தந்துள்ளார் ஸ்ரேயா. ஜனவரியில் படப்பிட்ப்பு துவங்குகிறதாம்.

தமிழில் ஸ்ரீகாந்துடன் அவர் நடிப்பதாக வந்த செய்திகள் வெறும் வதந்திதானாம். தமிழில் அடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். வேறு படங்கள் எதுவும் இப்போதாக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார்.

சரத் குமாருடன் இவர் நடித்துள்ள ஜக்குபாய் பொங்கலுக்கு வெளியாகிறது.

விஜய்யை கிறுகிறுக்க வைத்த சன்!

வேட்டைக்காரனால் வருகிற டென்ஷனிலிருந்து மீள்வதற்குள் விஜய்க்கு தாவு தீர்ந்து போகிறதாம்.
இதை விட பேசாமல் காங்கிரஸில் சேர்ந்து அதன் பாரம்பரிய அடையாளமான கோஷ்டிப் பூசலையே சமாளித்திருக்கலாம் போலிருக்கு என்று புலம்பும் அளவுக்கு.

பொதுவாக தான் நடிக்கும் எந்தப் படமாக இருந்தாலும் கடைசி நிமிடம் வரை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது விஜய் மற்றும் அவரது கைடு-காட்பாதர்- நிஜபாதர் எஸ்ஏசியின் பாணி.
முதல் படமான நாளைய தீர்ப்பு மற்றும் ரசிகனிலிருந்தே இப்படி இருந்தே பழக்கப்பட்ட விஜய்க்கு வேட்டைக்காரன் ஒரு ஷாக் அனுபவம்.
படத்தை ஆரம்பித்த போது பிரச்சினை இல்லை என்றும் சன் பிக்சர்ஸுக்கு விற்றதிலிருந்து பெரும் பிரச்சனையாகிவிட்டது விஜய்க்கு.
முதலில் படத்தை அவர் சொன்ன தேதிக்கு வெளியிடாமல் படத்தை முடக்கியவர்கள், பின்னர், விஜய்யின் அரசியல் சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளையும் ரீஷூட் செய்தால்தான் ரிலீஸ் பண்ண முடியும் என முரண்டுபிடிக்க வேறு வழியில்லாமல் அதையும் செய்து கொடுத்தார் விஜய்.
தீபாவளி, பொங்கல் என ஏதாவது ஒரு விசேஷ நாளில் படத்தை வெளியிட ஆசைப்பட்டார் விஜய். ஆனால் எதிலும் இல்லாமல் டிசம்பர் 18ம் தேதி என அவர்களே நாள் குறித்துவிட்டார்கள். அதற்கடுத்த வாரம் ரிலீஸ் பண்ணியிருந்தால் கூட அது கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாகியிருக்கும்.
இப்போது உச்சகட்டமாக, படத்தை ரிலீசுக்கு முன் ஒரு சிறப்புக்காட்சி பார்க்கலாம், பிரிண்டை கொண்டுவாங்க என, பழைய நினைப்பில் விஜய் அண்ட் கோ கேட்க, 'அதெல்லாம் முடியாது. ரிலீசன்னைக்கே பாருங்க' என்று முகத்திலடித்தமாதிரி சொல்லிவிட்டதாம் சன் தரப்பு.
என்ன கொடுமைப்பா இது? என தந்தையிடம் புலம்புகிறாராம் விஜய்!.

வாய்ப்பு வந்தால் தமிழில் நடிப்பேன் : அசின்

ஜாலி மூடில் இருக்கிறார் அசின். காரணம் இல்லாமல் இருக்குமா? எல்லாம் கலைமாமணி விருது வாங்கிய சந்தோஷம்தான்.
இப்போது இரண்டு இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் அசின். (நம்பிட்டோம்!) அதனால் தான் தமிழில் அவரால் நடிக்க முடியவில்லையாம். இருப்பினும் தமிழில் நல்ல கதையுடன் கூடிய படம் அமைந்தால் நான் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் அசின்.
ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அசின் அவரது அம்மாவுடன் தான் இருக்கிறாராம். எந்த பார்ட்டிக்கும் பப்புக்கும் போவதில்லையாம். இந்தியில் நடிப்பதால் தமிழில் நடிக்க மாட்டார் அசின் என்று வருகின்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விரைவில் ஒரு தமிழ் படத்தில் நடிப்பாராம் அசின். நல்ல கதையை வைத்திருக்ககும் இயக்குநர்கள் என்னை சந்தித்தால் கால்ஷீட் தர ரெடி என்கிறார் அசின்.
தமிழ் இயக்குநர்கள் யாராவது கதையைக் கொண்டு போனால் அவரிடம் கதையைக் கேட்பதற்கு கூட நேரமில்லாமல் அசின் காட்டிக் கொள்வது... வேறு விஷயம்.

விஜய்க்கு அஜீத்தின் அட்வைஸ்!

'விஜய் அரசியலில் இறங்கக் கூடாது என்பது ஒரு நண்பனாக என்னுடயை வேண்டுகோள். அவரை அரசியல் நிம்மதியாக இருக்க விடாது.
அதற்காக அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. அவருக்கு என்ன விருப்பமோ அதைச் செய்யட்டும்!' என்று கூறியுள்ளார் அஜீத்.
மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பளிச்சென்று பேசிவிடுவதில் ரஜினியின் நேர் சிஷ்யர் அஜீத். ஏன் இப்படி? என்று கேட்பவர்களிடம், 'பின் விளைவுகள் பற்றியெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இது என் கருத்து அவ்வளவுதான்' என்று பளிச்சென்று பதில் தருவார்.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அஜீத், இப்படிக் கூறியுள்ளார்:
"அரசியல் எனக்கு வேண்டாம். சரி வராது. விஜய்யின் அரசியல் பிரவேசம் அவர் தனிப்பட்ட விஷயம். என்னைப் பொருத்தவரை அவர் அரசியலுக்கு வர வேண்டாம்.
அப்படி வருவதால் அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வேண்டுமானால் சந்தோஷப்படலாம். ஆனால் மற்றவர்களுக்கு அதில் எந்த அளவு சந்தோஷமிருக்கும் என்று தெரியவில்லை.
அவருடன் நிறைய பேசி பழகியிருக்கிறேன். அவரது நலம் விரும்பாகவே இதை நான் சொல்கிறேன். ஆனால் அரசியலில் ஈடுபடும் முடிவு அவரது சொந்த விருப்பமே.
என்னைப் பொருத்தவரை இனி படங்களின் தரத்தில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன். எனக்கும் 40 வயது ஆகப் போகிறது. இந்த வயதில் வாழ்க்கையும் தரமாக இருக்க வேண்டும், படங்களும் தரமாகத் தர வேண்டும்" என்றார்.
நூத்துல ஒரு வார்த்தை!

விக்ரம் ஹீரோயின் மாற்றம்?

தனது புதிய படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் செல்வராகவன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

ஹீரோ விக்ரம், ஹீரோயின் ஸ்வாதி என்பது அனைவரும் அறிந்தது.

இந்தப் படத்தில் ‌ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் கல்தா கொடுத்திருக்கிறார் செல்வா. இந்தி இசையமைப்பாளர்தான் இந்த புதிய படத்துக்கு இசை. அடுத்த கல்தா யாருக்கு என்பதுதான் இப்போது இன்டஸ்ட்‌ரியில் பரபரப்பாக பேசப்படும் விஷயம்.

அனேகமாக ஹீரோயின் ஸ்வாதி படத்திலிருந்து தூக்கப்படலாம் என்கிறார்கள். நடிப்பு ச‌ரியில்லை, கிளாமர் அதைவிட மோசம் என காரணங்கள் அடுக்குகிறது பட யூனிட். அதேபோல படத்தில் ஆண்ட்‌ரியா நடிப்பதாக வந்த செய்தியும் உண்மையில்லையாம்.

மொத்தத்தில் என்னமோ நடக்குது மர்மமா இருக்குது கதைதான்.

சூறாவளியானார் வைகைப்புயல் புயல்...

வைகைப்புயல் கொஞ்ச நாட்களாக சூறாவளியாகியிருக்கிறார். அதில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும். இவரது தினச் சம்பள கணக்கு திகில் மூட்டுகிறது.

மொத்தமாக பேசுகிற சம்பளமோ மூச்சு முட்ட வைக்கிறது. அப்படி கொடுக்க சம்மதித்தாலும் அவர் நடந்து கொள்கிற முறை? ஐயோடா...!

சமீபத்தில் தனது பேராண்ம பலத்தை காட்டிய ஹீரோவின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் சூறாவளி. சம்பளம் பெரிய்ய்ய்ய்ய ஒன்று! பத்து நாட்களுக்குள் முடிச்சிரணும் என்ற கண்டிஷனோடு ஒப்பந்தம் போட்டாராம். ஆனால் படப்பிடிப்புக்கு வருவதே பதினொரு மணிக்குதானாம். சரியாக நாலு மணிக்கெல்லாம் வர்ர்ர்றட்டுமா என்று கிளம்பிவிடுகிறாராம். இடையில் ‘லஞ்ச்’ ஒரு மணி நேரம்! எடுக்க நினைத்த காட்சிகளில் பாதி கூட முடியவில்லை. அதற்குள் கால்ஷீட்டே முடிந்துவிட்டதாக கூறினாராம் அவரது மேனேஜர். இதென்ன பெரிய தில்லாலங்கடியாக இருக்கே என்று பதறுகிறார்கள்.

இப்படியெல்லாம் நடக்குதா என்று யூனிட்டை சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் விசாரித்தால், ஆரம்பத்தில் ஒன்றிரண்டு நாட்கள் அப்படி நடந்திச்சு. ஆனால் அதுக்கு பிறகு சின்சியரா வந்து முடிச்சு கொடுத்திட்டாரு. படத்திலே அவருடைய பங்கு ரொம்ப பிரமாதமாக வொர்க் அவுட் ஆகியிருக்கு என்கிறார்கள். நல்ல குடும்பத்து படம். நாசுக்கா முடிச்சு கொடுங்கப்பு...

சந்தியாவின் கவர்ச்சி ஆல்பம்!

வாரிசு நடிகரை வளைத்துவிட்டார் என்ற சீரியஸான புகாரில் சிக்கியுள்ள சந்தியா, இப்போதல்லாம் கோடம்பாக்கம் பக்கம் அதிகம் தலைகாட்டுவதில்லையாம்.

பெரும்பாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு ப் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறாராம்.

இப்போது தமிழில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் நடித்துவரும் சந்தியா, சமீபத்தில் ஒரு ஸ்பெஷல் போட்டோ செஷன் நடத்தினாராம்.

இதிலிருந்து கவர்ச்சி ததும்பும் (?) தனது ஸ்டில்களைத் தேர்ந்தெடுத்து, தனி ஆல்பமாக்கி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் பட உலக பிரமுகர்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளாராம். இதற்கு ஓரளவு பலனும் கிடைத்துள்ளதாம்.

இனி இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் வெளியாகி வெற்றி பெற்றால் தவிர, வேறு தமிழ்ப்படங்கள் ஒப்புக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டாராம் சந்தியா.

அ‌ஜித்தின் 50வது படம்

அசல் அ‌ஜித்தின் 49வது படம். தல-யின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குகிறார்கள்? தயா‌ரிப்பாளர் யார்? யாருக்கும் இதுவரை ச‌ரியான பதில் தெ‌ரியவில்லை.

முதல் முறையாக ஐம்பதாவது படம் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. பில்லா படத்தை தயா‌ரித்த சுரேஷ் பாலா‌ஜி அ‌ஜித்தின் 50வது படத்தை தயா‌ரிக்கிறாராம். இது முதல் காப்பி அடிப்படையிலான தயா‌ரிப்பாக இருக்கும் என்கிறார்கள்.

விஜய்யின் வேட்டைக்காரனை ஏவிஎம் தயா‌ரித்திருந்தாலும், அதன் ஒட்டு மொத்த விநியோக உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியிருக்கிறது.

அதுபோல் அ‌ஜித்தின் 50வது படத்தை சுரேஷ் பாலா‌ஜியிடமிருந்து முதல் காப்பி அடிப்படையில் வாங்கப் போவது சன் பிக்சர்ஸ்தான் என்றும் கூறுகிறார்கள்.

இன்னும் ஓ‌ரிரு தினங்களில் உண்மை நிலவரம் தெ‌ரிய வரலாம்.

பரத் கேட்கும் சம்பளம்

திடீர் பிரேக் விட்டுவிட்டார்கள் திருத்தணிக்கு. பேரரசு இயக்கி அவரே இசையமைத்திருக்கும் இப்படம் காரம் ஸ்வீட் கலந்த கரம் மசாலாவாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முதல் ஷெட்யூலில் 25 நாட்கள் படப்பிடிப்பை முடித்த பேரரசு அடுத்த ஷெட்யூல் போவதற்கு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாராம். (ஒங்களுக்கேவா?)

இடையில் கதை கேட்பது, சம்பளம் பேசுவது என்று தனி டிராக் ஓட்டிக் கொண்டிருக்கிறார் பரத். ஆனால், என்ன காரணத்தாலோ மோசர்பேர் தயாரிக்கும் படத்திலிருந்து பரத் நீக்கப்பட்டுள்ளதாக கும்மியடிக்கிறது கோடம்பாக்கம். கண்டேன் காதலை படத்திற்கு பிறகு ஹைட் அண்டு சீக் என்ற படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்த இந்நிறுவனம் இதற்காக புது இயக்குனர் ஒருவரையும் நியமித்து டிஸ்கஷனில் அமர வைத்திருந்தது. ஆனால், தனது சம்பளத்தை திடீரென்று ஏற்றிவிட்டாராம் பரத். இதனால் தனது யோசனையில் சற்றே பின் வாங்கியிருக்கிறதாம் மோசர்பேர்.

அப்படியே இன்னொரு தயாரிப்பாளருக்கும் எனிமா கொடுத்திருக்கிறார் பரத். ஜெயம்கொண்டான் என்ற வெற்றிப்படத்தை கொடுத்து பின் கண்டேன் காதலையில் தன்னை நிரூபித்திருக்கும் கண்ணன் இயக்கத்தில் மற்றொரு படத்தை தயாரிக்கப் போகிறார் சத்யஜோதி தியாகராஜன். இந்த படத்தில் பரத் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கண்ணன் விரும்ப, சம்பளப் பேச்சு வார்த்தை நடக்கிறது. விடுவதும், பெறுவதும் பரத் கையில் என்கிறார்கள்.

பார்த்து சாரு...

Monday, November 23, 2009

Vettaikaran Audio Release Part 2

Vettaikaran Audio Release Part 1

Sunday, November 22, 2009

தந்தை மகனுக்காற்றும் உதவி



தந்தை மகனுக்காற்றும் உதவி... மகனை வைத்து படம் எடுப்பதுதான் என்பதை நிரூபித்த பாக்யராஜ் தனது மகனை வைத்து சித்து +2 என்ற படத்தை எடுத்து மொசர்பேர் நிறுவனத்திடம் விற்றும் விட்டார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சாந்தனு இப்போது ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் ஹோசிமின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் முழுநீள ஆக்க்ஷன் படம் என்பதால் இதற்கு அடுத்த படத்தையும் சாந்தனுவை வைத்து இயக்குவதற்கு தயாரான பாக்யராஜ் கதையை யோசித்து யோசித்து கடைசியில் தாம் முதலில் இயக்கிய படமான சுவரில்லாத சித்திரங்கள் படத்தையே ரீமேக்காக எடுத்துவிடும் முடிவெடுத்துவிட்டாராம்.
ஆனால் அந்தக் கதை இப்போதைய சூழ்நிலைக்கேற்ற மாதிரி கொஞ்சம் மாற்றம் பெறுகிறது.
இதற்காக கதையிலும் மாற்றம் செய்துவிட்ட பாக்யராஜ் திரைக்கதை எழுதும் பணியில் இப்போது இருக்கிறாராம்.

ஐந்து பெண்களை மீண்டும் ஏமாற்றும் ஜீவன்

அட ரொம்பதான் ஜாலி மூடில் இருக்கிறார் இயக்குநர் செல்வா. இருக்காதா பின்னே... அவருடைய படம் நான் அவனில்லை பாகம் 2.. ஏ சர்டிபிகேட் வாங்கிவிட்டதல்லவா..? விட்டா இந்த சந்தோஷத்தை விருந்து வைத்து கொண்டாடுவார்கள் போலும்.
இப்போதெல்லாம் ஏ சர்டிபிகேட் கொடுத்துவிடமாட்டார்களா என்று குலதெய்வத்திடம் கூட சில இயக்குநர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஐந்து பெண்களை ஏமாற்றும் கதை கொண்ட இந்தப் படத்தின் முதல் பாகம் வந்து ஏதோ கொஞ்சம் தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்து கொடுத்தது.
இதனால் உற்சாகமடைந்த இயக்குநர் செல்வா டீம் அதே ஜீவனை கதாநாயகனாக வைத்து பாகம் 2 ஐயும் தயாரித்துவிட்டார்கள்.
இப்போது இந்தப் படமும் ஏ சான்றிதழ் வாங்கி ரீலிசுக்குத் தயாராகிவிட்டது.
இந்தப் படத்திலும் ஐந்து பெண்களை ஏமாற்றுவதுதான் ஜீவனின் வேலையாம்.
சுவிட்சர்லாந்து, துபாய் போன்ற இடங்களில் அலைந்து திரிந்து காட்சிகளைப் படம் பிடித்திருக்கிறார்கள்.

வர்றார் ஜக்குபாய்

ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வெளிவருவதாக இருந்த படம் ஜக்குபாய். பின்னால் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக அந்தப் படம் ரஜினியை வைத்து எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
பின்பு ராதிகா சரத்குமார் அந்தப் படத்தின் கதையை கேட்டு சரத்குமாரை கதாநாயகனாகப் போட்டு ஜக்குபாய் படத்தை எடுத்தார். இந்தப் படம் தயாராகியும் விற்பனையாகாமல் இருந்தது.
இப்போது சரத்குமாரின் பழசிராஜா ரிலீசாகியுள்ளதைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்கள்.
டிசம்பர் 11 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று தெரிகிறது. பழசிராஜாவில் சரத்குமாரின் நடிப்பு நன்றாக உள்ளது குறித்து பிரிவியு பார்த்த பிரபலங்கள் பாராட்டியுள்ளார்களாம்.
இந்த வரிசையில் ஜக்குபாயும் ஹிட்டாகும் என்று நம்புகிறார் சரத்குமார்.
ஆனால் சரத்குமாரின் சமீபத்திய படங்கள் எல்லாம் விஜயகாந்த் படங்களைப் போல் டுமீல் ரகங்கள் ஆகிவிட்டதால் இந்தப் படம் தேறுமா என்ற சந்தேகத்துடனே ஜக்குபாயை எதிர்பார்க்கிறார்கள் சரத்குமார் ரசிகர்கள்.

2012 : ருத்ரம் பட விமர்சனம் ('உலகம் அழிய நேர்ந்தால்...' )

'உலகம் அழிய நேர்ந்தால்...' என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012. உலகம் முழுக்க பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தமிழில் 'ருத்ரம்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. கதை இன்றைய 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது.

பெரும் ஆக்ரோஷத்தோடு பூமி வாய்பிளக்க பெரிய பெரிய நகரங்கள் புதையுண்டு போகின்றன. கண் முன்னே பெரும் அவலம் நடக்க என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நின்று அந்த அழிவில் ஐக்கியமாகின்றன.

இதற்கிடையில் அமெரிக்காவில் வசிக்கும் ஜான் குசேக் தனது குடும்பத்தினரை காப்பாற்ற போராடுகிறார். பூமி மேலடுக்கு அதன் பாதாளத்துக்கு இறங்கும் நிலையில் ஜான்குசேக் காரை வேகமாக ஒட்டி குடும்பத்தினரை காப்பாற்றி விமானத்தில் ஏற்றி மயிரிழையில் உயிர் தப்புகிறார்... என்று போகிறது கதை.

அட கதையை விடுங்க. இந்த மாதிரி படங்களுக்கு கதை, திரைக்கதையை விட அதை பிரமாண்டமாய், ரசிகர்கள் வாய் பிளக்கும் விதத்தில் படமாக்குவதுதான் சவால். அந்த வகையில் மிரட்டியிருக்கிறார் ரோலண்ட்.

நாயகன் குடும்பத்தோடு தப்பிக்கும் காட்சி அச்சு அதல் சினிமா த்தனம் என்றாலும், அந்த காட்சியமைப்பு சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது ரசிகர்களை.

எரிமலை தீப்பிடிப்புகள் பூமிக்குள் இருந்து சீறி பாய்வது, மலைகள் பிளந்து உருள்வது, வானளாவிய கட்டிடங்கள் சரிந்து மண்ணில் புதைவது, மேம்பாலங்கள் உடைந்து கார்கள் பொம்மைகளாய் வானில் இருந்து விழுவது, பாலம் உடைந்து ரயில் தூக்கி வீசப்படுவது, ஒரு பல மாடி சூப்பர் மார்க்கெட் பாதியாக பிளப்பது, சுனாமி பேரலை நிலப்பகுதியை விழுங்குவது, கப்பல்கள் தூக்கி வீசப்பட்டு குடியிருப்புகளில் வந்து விழுவது என நம்மை உறைய வைக்கின்றன காட்சிகள்.

உலகம் அழியும் காட்சியை உருவாக்கிய விதத்துக்காக இயக்குநருக்கும் அவரது கிராபிக்ஸ் டீமுக்கும் உலகம் முழுவதுமே ஆச்சரியம் கலந்த பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சினிமா தொழில் நுட்பத்தின் உச்சம் இந்தக் காட்சிகள். ஒரு அழிவைச் சொல்ல இத்தனை செலவும் உழைப்பும் தொழில் நுட்பமும் தேவையா என்றெல்லாம் விமர்சனங்கள் வரக்கூடும்... இந்தப் படத்துக்காக செலவான தொகை ரூ. 1,400 கோடி என்கிறார்கள்.

படம் கொஞ்சம் நீளமே. ஆனால், ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் இரண்டரை மணி நேரமும் கழிகிறது.

"பழசிராஜா" திரைவிமர்சனம்

கேரளாவில் 1850-களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா மன்னன் பற்றிய வரலாற்று படம். இந்தியாவுக்குள் வியாபாரத்துக்கு வரும் வெள்ளையர்கள் குறுநில மன்னர்களை பிரித்து நாடு பிடிக்கத்துவங்குகின்றனர். கேரளாவிலும் மன்னர்களை அடிபணிய வைத்து வரி விதிக்கின்றனர். பழசிராஜா அடிபணிய மறுக்கிறார். அவன் கோட்டைக்குள் வெள்ளையர் படை நுழைகிறது. அரண்மனையை கைப்பற்றி கஜானாவை கொள்ளையடிக்கின்றனர்.

பழசிராஜா தளபதி எடச்சன குங்கனுடன் தலைமறைவாகிறார். மலைவாழ் மக்களை திரட்டி ஆங்கிலேயருடன் யுத்தம் செய்கின்றார். வெள்ளையர் படைக்கு பேரழிவு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் பழசிராஜாவுடன் சமரச ஒப்பந்தம் போட்டு போரை நிறுத்துகின்றனர். பிறகு திடீரென ஒப்பந்தத்தை மீறுகின்றனர். ஆவேசமாகும் பழசிராஜா மீண்டும் போரை துவக்குகிறார். வெள்ளையர் படைகளுக்கு உதவ வேறுபகுதிகளில் இருந்து நவீன ஆயுதங்களுடன் வீரர்கள் குவிகிறார்கள். உள்ளூர் எட்டப்பர்களும் வெள்ளையர்களுக்கு துணை நிற்கின்றனர்.

இதனால் ஆங்கிலேயர் படைகளை எதிர்க்க முடியாமல் பழசிராஜா வீரர்கள் நிலைகுலைகின்றனர். பழசியின் தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். சரணடையும்படி பழசிராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...

கையில் வாள், வீராவேச பேச்சு, அழுத்தமான நடையில் பழசிராஜா மன்னராக பளிச்சிடுகிறார் மம்முட்டி. மனைவியிடம் நேசம் காட்டுவது, வீர உரையாற்றி படைகளை திரட்டுவது, தளபதிகள் கொல்லப்பட்டதை கண்டு கண்கள் சிவப்பாகி கலங்குவது என உணர்வுகளை கொட்டுகிறார். கிளைமாக்சில் வீரமரணத்தை தழுவி நெஞ்சில் நிற்கிறார்.

எடச்சனகுங்கன் கேரக்டரில் சரத்குமார் வாழ்ந்துள்ளார். முறுக்கேறிய தேகம், லாவகமான வாள்வீச்சு, மன்னனை காக்க வெள்ளைய படையை எதிர்க்கும் வெறி என வரலாற்று தளபதியாய் இன்னொரு பரிணாமம் காட்டுகிறார்.

எட்டப்பவேலை செய்யும் சுமனை வாள் சண்டையில் கொன்று பழிதீர்ப்பது கைதட்டல். பதவி போட்டியில் பழசிராஜா படை பிரியும்போது பழசிராஜா வளர்ப்பு தந்தை என பிளாஷ்பேக் கதை சொல்லி தளபதி பதவியை தூக்கி எறிந்து மனம்பூரா வியாபிக்கிறார். இறுதியில் வெள்ளைய படைகள் சுற்றி வளைத்ததும் உங்களிடம் சிக்கி தூக்கில் தொங்கமாட்டேன் என கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்து மாவீரனாய் பிரதிபலிக்கிறார்.

மலைவாழ் பெண்ணாக வரும் பத்மபிரியா எதிரிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு கேரக்டருக்கு வலுசேர்க்கிறார். பழசிராஜா மனைவியாக வரும் கனிகா சோகத்தை பிழிகிறார். மலைவாழ் மக்கள் தலைவனாக வந்து தூக்கியிடப்படும் மனோஜ் கே.விஜயன், மனதில் நிற்கிறார்.

இளையராஜா இசை, ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு பலம் சேர்க்கின்றன. ஆரம்ப காட்சிகளில் நாடகத்தனம். வரலாற்று கதையை ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான காட்சிகளுடன் கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர் ஹரிஹரன்.

Friday, November 20, 2009

சினிமா சங்க நடவடிக்கை - கமல் பேட்டி

டெல்லியை தலைமையிடமாக கொண்ட ‘பிக்கி’ அமைப்பின் கருத்தரங்கு சென்னையில் கடந்த 2 நாட்களால நடந்தது. இந்த அமைப்பின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சி முடிவடைந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தார்.;
“இனிமேல் தயாராகும் சினிமா படங்களின் காப்புரிமையை முறைப்படுத்த வேண்டும்.
பழைய சினிமா படங்கள் காணாமல் போவதை தவிர்பதற்கு கலாசார கடமையாக நினைத்து சினிமா படங்களை பாதுகாக்க வேண்டும்.
சினிமா சம்பந்தப்பட்ட சங்கங்கள் சட்டவிரோதமாக தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது.
சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பரீதியில் சிக்கல்கள் ஏற்படவாய்ப்பிருக்கிறது. எனவே அதை வரைமுறைபடுத்த வேண்டும். சினிமாவுக்கு அது தேவையாக இருக்கிறது. எடிட்டிங் டப்பிங் போன்ற பணிகளுக்கு இந்த பாதுகாப்பு தேவைப்படுகிறது.
சினிமா படங்களுக்கு வழங்கப்படும் வங்கி வட்டியை குறைப்பதற்காக சினிமா தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
தென்னிந்திய அளவில் ‘பிக்கி’ அமைப்பிற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் தலைவராக நான் (கமல்ஹாசன்) இருக்கிறேன். கமிட்டியின் உறுப்பினர்களாக இயக்குனர் கே.பாலசந்தர் பட அதிபட் ஏ.வி.எம்.சரவணன். இயக்குனர் மணிரத்னம். பாலசுப்பிரமணிய ஆதித்தன். மனோஜ் குமார் சந்தாலியா. டி.ஜி.தியாகராஜன். சாய்பிரசாத். கவிதா பிரசாத். ஆர்.சரத்குமார். எம்.எஸ்.குகன். ஜி.ராம்குமார். மம்முட்டி. மோகன்லால் உள் பட 31 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருக்கிறார்கள்.”

தமன்னா கைவசம் ஆறு படங்கள்

கண்டேன் காதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கும் தமன்னா அடுத்தடுத்து பையா, தில்லாலங்கடி, சுறா படங்கள் வெளிவர உள்ளன. இதில் பையா படம் பொங்கல் அன்று வெளிவரவிருக்கிறது. தமன்னாவுக்கு கமலுடன் நடிக்க வேண்டும் என்று மிகப்பெரிய ஆசை இருக்கிறதாம். இவருக்குப் பிடித்த ஹிரோயின் அசின் மற்றும் திரிஷாதானம். அவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல் தனக்கெனவும் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்க தமன்னா ரொம்பத்தான் ஆசைப்படுகிறாராம். தான் ஒரு நடிகையாக இருப்பதை நினைத்து அடிக்கடிப் பெருமைப்படும் தமன்னாவை இந்தியில் நடிக்கக் கூப்பிட்டார்களாம். நல்ல கதை என்ற போதிலும் அதில் ஒரு காட்சியில் அதில் நிச்சல் உடை அணிந்து வரவேண்டிய காட்சி இருந்ததால் முடியாது என்று சொல்லிவிட்டாராம் தமன்னா. மேலும் இரண்டு தெலுங்கு படத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் தமன்னா. விஜயுடன் நடிப்பது தமன்னாவுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கிறதாம்.

MailPrint பிரான்ஸ் மொழி பேசும் சமீரா

‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த சமீரா நடிப்பில் பாஸ் மார்க்கை அள்ளிப் போனார். ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் இவருடன் சேர்த்து மொத்தம் மூன்று ஹிரோயின் என்றாலும் சமீராவுக்கு இந்த படம் நல்ல பெயரை வங்கி கொடுத்தது. அதை அடுத்து இப்போது இவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் அசல். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார் சமீரா. இந்த படத்தை சரண் இயக்க, தயாரிப்பது சிவாஜி புரடக்க்ஷன்ஸ். இந்த படத்தில் பிரான்ஸ் கலாச்சார நிறுவனத்தில் வேலை செய்பவராக வருகிறார் சமீரா. சமீபத்தில் இந்த படத்தின் சில காட்சிகளை பிரான்ஸில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். படத்தில் சில காட்சிகளில் சமீரா பிரான்ஸ் மொழி பேசி நடிக்கிறாராம். பிரான்ஸ் மொழியை பள்ளியில் படிக்கும் போது இரண்டாவது மொழியாக தேர்ந்தெடுத்து படித்ததால் அம்மணி பிரான்ஸ் மொழி பேசும் இந்த படத்தில் காட்சிகளில் பின்னிப்பெடல் எடுத்துவிட்டாராம்.

சிங்கத்துக்காக உருவான காவல்நிலையம்

ஸ்டுடியொ க்ரீன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம்’ படத்தில் அரிவாள் இயக்குனர் ஹரி ரொம்பவே பிஸியாக இருக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடி அருந்ததி புகழ் அனுஷ்கா.
படத்தில் காவல்நிலையம் நடக்கும் சம்பவம் தொடர்பான ஒரு காட்சி வர, இந்த காட்சியைப் படம் பிடிக்க ஒரு காவல் நிலையம் தேவைப்பட்டது. காவல் நிலையம் அமைக்க சென்னை நகரம் முழுவதும் இடத்தை தேடோ தேடு என்று தேடினார் ஹரி.
ஆனால் ஒரு இடம் கூட அவர் நினைத்தபடி அமையவில்லை. கடைசியாக சாலிகிராமத்தில் அமைக்கலாம் என்று முடிவுசெய்து ஒரு இரவுக்குள் அந்த காவல் நிலையத்தை அமைத்திருக்கிறார்கள்.
காலையில் அந்த காவல்நிலையத்தைப் பார்த்த மக்கள் ஏற்கனவே ஒரு காவல் நிலையம் இந்த ஏரியவில் இருக்க, இன்னொரு காவல் நிலையமா? என்று ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறார்கள்.
அதற்கு பின் தான் தெரிந்துது, இது சினிமாவுக்காக போடப்பட்ட செட் என்று. அந்த அளவுக்கு இயக்குனர் ஹரி அந்த செட்டை அமைத்திருந்தார்.

ஜெயம்ரவியை இயக்கும் பிரபுதேவா (பாரிஸில் வாழும் இரண்டு தமிழ் குடும்பங்களின் வாரிசுகள் காதலிக்கிறார்கள்)

ஜாலி மூடில் இருக்கிறார் பிரபுதேவா. நயன்தாரா பிரச்சனையை மீடியாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டிவிட்டது ஒரு காரணம் என்றாலும், இன்னொரு காரணம் அவருடைய இந்திப்படம் ஹிட்டானதுதான்.
இதைத் தொடர்ந்து இந்திப்படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் பிரபுதேவாவுக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த இந்தி வாய்ப்புகளை தூரத்தள்ளிவிட்டு, தமிழ் படத்தை இயக்குகிறார் பிரபுதேவா.
இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ஜெயம் ரவி. இந்தப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
பாரிஸில் வாழும் இரண்டு தமிழ் குடும்பங்களின் வாரிசுகள் காதலிக்கிறார்கள், ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் தோற்றுப் போக, அதற்குப் பிறகு இருவரும் என்னவாகிறார்கள் என்பதுதான் கதையாம்.

ஜெயம்ரவிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்றுத் தெரிகிறது. ஜெயம்ரவி தில்லாலங்கடியை முடித்த கையோடு இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.