Thursday, September 24, 2009

ஒரே அறையில் பிரபுதேவா - நயன்தாரா

நடிகர் பிரபுதேவாவும் நடிகை நயன்தாராவும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் உலா வந்து கொண்டிருந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் இருவரும் ஒரே காரில் சுற்றுவதும் ஒரே ஓட்டல் அறையில் தங்குவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மும்பையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். விழா முடிந்ததும் அதே காரில் ஒன்றாகவே சென்றனர். அவர்களிடம் நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு இதற்கு பதில் சொல்லவில்லை என்று இருவரும் கூறிவிட்டார்கள். ஆனால் நட்சத்திர ஓட்டலில் இருவரும் அறை எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்களாம்.

என்னை அடிக்கட்டும் பார்க்கலாம்... -நயன்தாரா சவால்!

பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தில் வாயையே திறக்காமல் இருந்த பிரபுதேவாவின் மனைவி ரமலத் இப்போது பத்திரிகைகளிடம் தனது குமுறலை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக கண்ணீரும் கவலையுமாக முன்னணி நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், இனிமேலும் என் கணவருடன் நயன்தாராவை பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன் என்று கூறியிருப்பதுதான் அதிர்ச்சி.
அந்த பேட்டியில் அப்படி என்னதான் கூறியிருக்கிறார் ரமலத்?
ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?
நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது. இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.
நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.
இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.
மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும். நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்? இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும்.
இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ரமலத்.
உடனடியாக இந்த பேட்டி குறித்த தகவல் சென்னையில் இருந்து நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் போனது. பேட்டியை போனிலேயே படித்து காண்பித்தார்களாம். முழுவதையும் கேட்ட நயன் சொன்ன பதில்தான் டெரர். என்னை அடிப்பேன் என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரமலத். இதை வைத்தே நான் அவர் மீது போலீசில் புகார் கொடுக்க முடியும். வருகிற 28 ந் தேதி விஜய் டி.வி நடத்தவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நானும் பிரபுதேவாவும் சேர்ந்து கலந்து கொள்ளப் போகிறோம். முடிந்தால் அங்கு வந்து அடிக்கட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டாராம். ஆக, 28 ந் தேதி இருக்கு பஞ்சாயத்து!

எந்திரன் க்ளைமாக்ஸ்... ரஜினி பங்கேற்கும் நெருப்புச் சண்டை!

எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ் மிக மிக ரகசியமாக படமாக்கப்பட்டு வருகிறது, சென்னையில். படத்தின் இறுதியில் இடம்பெறும் நான்கு நிமிட நெருப்பு சண்டைக் காட்சி இது. பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுக்கூடம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்படுவது போலவும் அதில் ரஜினியின் சண்டை இடம்பெறுவதுமாக இந்தக் காட்சி படமாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியே இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

இந்தக் காட்சி படமாக்கப்படுவதை எந்திரன் கிராபிக்ஸ் குழு (ஹாலிவுட் நிறுவனம் இது) உன்னிப்பாகக் கவனித்து, பின்னர் தேவைக்கேற்ப கிராபிக்ஸ் காட்சிகளை அதனுடன் இணைத்து பிரமாண்டப்படுத்த உள்ளது.

ஜார்ஜ் லூகாஸ் என்பவரால் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தி இது. இந்தியப் படம் ஒன்றில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

இந்தக் காட்சிகள் படமாகும்போது ரஜினிக்கு கொஞ்ச நேர வேலைதான் என்றாலும், நாள் முழுவதும் படப்பிடிப்பை அருகிலிருந்து கவனித்து வருகிறார்.

ஸ்ருதியைப் பாராட்டிய ஜெ.!

உன்னைப் போல் ஒருவன் படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஸ்ருதி கமல்ஹாசனை போனில் பிடித்து பாராட்டித் தள்ளி விட்டாராம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதனால் ஸ்ருதி படா குஷியாக காணப்படுகிறார். கலைஞானி கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. படம் பார்த்தவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் அதைப் பார்க்க்த தொடங்கியிருப்பதால் தியேட்டர்களில் கூட்டத்திற்கு அளவே இல்லை.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய அம்சமான இசையமைப்பாளர் ஸ்ருதிக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.

திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் பல்துறையினரும் ஸ்ருதியின் சிறப்பான இசையை பாராட்டிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையி்ல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ருதியைப் போனில் பிடித்து பாராட்டித் தள்ளியுள்ளாராம். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பேசிய அவர் ஸ்ருதியின் இசையைப் பாராட்டியதோடு, மிகப் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என ஆசிர்வதித்தாராம்.

இதனால் ஸ்ருதி பெரும் உற்சாகமாகியுள்ளார். முதல் படத்திலேயே இத்தனை பாராட்டுக்கள் கிடைத்திருப்பதால் அடுத்தடுத்து செய்யப் போகும் பணிகளில் முழுக் கவனத்தை செலுத்த அவர் தீர்மானித்துள்ளாராம்.

மோகன்லாலுக்கு டாக்டர் பட்டம்!

மலையாள நடிகர் மோகன்லால், ஆஸ்கர் விருது பெற்ற ரஸூல் பூக்குட்டி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஸ்ரீசங்கராச்சார்யா சம்ஸ்கிருத பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் காலடியில் உள்ள இப்பல்கலைக்கழகத்தின் இவ்வாண்டு பட்டமளிப்பு விழாவில் இப்பட்டம் வழங்கப்படும்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

திரைத் துறையில் இவ்விரு கலைஞர்களும் செய்துள்ள சாதனைகளுக்காக இந்த கவுரவம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

சிறந்த ஒலி அமைப்புக்காக ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்கு ரஸூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதிக்கு நன்றி சொன்ன கமல்

கமல் நடித்துள்ள உன்னைப் போல் ஒருவன் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் முதல்வர் கதாபாத்திரமும் இடம் பெற்றுள்ளது.
அந்தக் காட்சியில் யாரையும் நடிக்க வைக்காமல் முதல்வர் கருணாநிதியின் குரலை மிமிக்கிரி செய்து பயன்படுத்தியுள்ளார் கமல். அத்துடன் கோபாலபுரம் வீடும் காட்டப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி பெற்றே கமல் இதைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
 
முதல்வரின் வீடு சினிமாவில் காட்டப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இந்நிலையில் முதல்வரை சந்தித்த கமல், முதல்வரின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

'வேட்டைக்காரன்' படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கிவிட்டதால் விஜய் நிம்மதியாக இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நிஜம் அதுவல்ல... சன் நிறுவனத்தின் வியாபார திறமையையும் மீறி இந்தப் படம் ஓடாமல் போய்விடுமோ என்ற கவலையில், எடுத்த காட்சிகள் மற்றும் பாடல்களில் திருத்தங்கள் செய்த வண்ணமுள்ளாராம் விஜய்.

தொடர்ந்து மூன்று படங்கள் படுசுமார் என்ற ரிசல்ட் வந்துவிட்டதால், வேட்டைக்காரன் ஹிட் ஆகியே தீரவேண்டிய கட்டாயம் விஜய்க்கு.

இந்தப் படமும் சொதப்பினால், நிச்சயம் தனது பொன்விழாப் படத்துக்கு கத்தி வைப்பார்கள் விநியோகஸ்தர்கள் என்பதால் இந்தக் கூடுதல் அக்கறையாம்.

மேலும் இதுவரை இணையத்தில் வெளியானதாகச் சொல்லப்பட்ட பாடல்கள் மற்றும் வீடியோ எதுவுமே உண்மையானவை இல்லையாம். இவை இணையத்தில் வந்ததால் அவற்றுக்குப் பதில் புதிதாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள் வேட்டைக்காரன் யூனிட்டில்.

மேலும் இந்தப் படத்தோடு சூர்யாவின் ஆதவன் படமும் தீபாவளிக்கு மோத உள்ளது. எனவே அந்தப் பட வெளியீட்டை சில நாட்கள் தள்ளி வைக்க முடியுமா என்றும் முயற்சித்து வருகிறார்களாம்.

இவற்றையெல்லாம்விட விஜய்யை மிகவும் கவலையில் ஆழ்த்தியிருப்பது இணையத் தளங்களில் தன்னைப் பற்றி வரும் தாறுமாறான செய்திகள்தானாம். தன் படங்களை கிண்டலடித்து வரும் இணையதள நக்கல் கட்டுரைகளைப் பார்த்து பயங்கர அப்செட்டிலுள்ள விஜய், இதைச் சமாளிப்பது எப்படி என்று தெரிந்த பிஆர்ஓக்களிடம் கேட்டு வருகிறாராம்.

இந்தப் பிஆர்ஓக்களில் சிலர்தான் இணையத் தளங்களைப் புறக்கணித்து நடிகர்களுக்கும் படங்களுக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ரகசியம் விஜய்க்கு தெரியாது போலும்!.

என்னை அடிக்கட்டும் பார்க்கலாம்... - நயன்தாரா சவால்!

பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தில் வாயையே திறக்காமல் இருந்த பிரபுதேவாவின் மனைவி ரமலத் இப்போது பத்திரிகைகளிடம் தனது குமுறலை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார்.
இது தொடர்பாக கண்ணீரும் கவலையுமாக முன்னணி நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், இனிமேலும் என் கணவருடன் நயன்தாராவை பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன் என்று கூறியிருப்பதுதான் அதிர்ச்சி.

அந்த பேட்டியில் அப்படி என்னதான் கூறியிருக்கிறார் ரமலத்?

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?
நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது. இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும். நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்? இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ரமலத்.

உடனடியாக இந்த பேட்டி குறித்த தகவல் சென்னையில் இருந்து நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் போனது. பேட்டியை போனிலேயே படித்து காண்பித்தார்களாம். முழுவதையும் கேட்ட நயன் சொன்ன பதில்தான் டெரர். என்னை அடிப்பேன் என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரமலத். இதை வைத்தே நான் அவர் மீது போலீசில் புகார் கொடுக்க முடியும். வருகிற 28 ந் தேதி விஜய் டி.வி நடத்தவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நானும் பிரபுதேவாவும் சேர்ந்து கலந்து கொள்ளப் போகிறோம். முடிந்தால் அங்கு வந்து அடிக்கட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டாராம். ஆக, 28 ந் தேதி இருக்கு பஞ்சாயத்து!

மதுரை டூ தேனி - சீயான் காட்டிய ஆர்வம்

க்ளைமாக்சை மட்டும் நன்றாக யோசித்துவிட்டு, மிச்ச இரண்டேகால் மணி நேரம் ரசிகனை நெளிய விடும் படங்களுக்கு மத்தியில் துவக்கத்திலிருந்தே வித்தியாசத்தை காட்டியிருக்கிற படம் மதுரை டூ தேனி.
இது போன்ற படங்களுக்கு கெட்டி மேளம் கொட்ட தயங்குவதே இல்லை ரசிகர்கள்.
இடுப்பிலே கட்டியிருக்கிற அரைஞாண் கயிற்றை தாலியா கட்டுறானேடா... இப்படி க்ளைமாக்சை மட்டுமல்ல, படத்தின் போக்கையே ஜாலியாக விமர்சிக்கும் ரசிகனின் ஆச்சர்ய குரல்கள் சீயானின் காதில் எப்படி விழுந்ததோ தெரியவில்லை. படத்தின் தயாரிப்பாளரை நடிகர் விக்ரமே தொடர்பு கொண்டாராம்.

உங்க படம் நல்லாயிருக்குன்னு நிறைய பேர் சொல்றாங்க. அவங்க சொல்றதை கேட்டுட்டு எனக்கும் படத்தை பார்க்கணும்னு ஆசை வந்திருக்கு. ஒரு ஷோவுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?

ஏற்கனவே பி அண்டு சி ஏரியாவில் இருந்து பாராட்டுகள் குவிந்து வரும் சந்தோஷத்தில் இருக்கிற தயாரிப்பாளரும், இயக்குனரும் சீயானின் இந்த வார்த்தையை கேட்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்களாம். இன்னும் சில தினங்களில் படத்தை பார்த்துவிட்டு ஒரு கடிதமே எழுதி தர முன் வந்திருக்கிறாராம் விக்ரம்.

இந்த லட்டரை வச்சு அப்படியே சிட்டியையும் பிக்கப் பண்ணுங்க பிரதர்ஸ்....

சீமான் ஹீரோவாக நடிக்கும் உத்தரவு!

மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பிறகு முழு நேர நடிகராகவும் ஆகியிருக்கிறார் இயக்குனர் சீமான்.
உலக தமிழர்களுக்காக ஓயாமல் குரல் கொடுத்து வரும் சீமான், தனது கொள்கைகளை வலியுறுத்த திரைப்படத்தை ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வேடங்களில் நடித்து வந்த சீமான், முதன் முறையாக ஹீரோவாக அவதாரம் எடுக்கப் போகிறார். குருபார்வை, வானவில், ராஜ்ஜியம் போன்ற ஏராளமான படங்களை இயக்கிய மனோஜ்குமார் இயக்க உத்தரவு என்ற படத்தில் கதாநாயகனாக புரமோஷன் ஆகியிருக்கிறார் சீமான். இப்படத்திற்கு இசை விஜய் ஆன்ட்டனி.

குதிக்கணும்னு முடிவு செய்தபின் நீச்சலுக்கு பயந்தால் ஆகுமா? கடந்த சில மாதங்களாகவே சண்டை பயிற்சி, நடனப் பயிற்சி எல்லாவற்றையும் முறையாக கற்றுக் கொண்டாராம். நமது கலாச்சாரத்தை எடுத்துக் கூறும் பாத்திரத்தில் நடிக்கிறாராம். வசனங்களை மனோஜ்குமார் எழுதியிருந்தாலும், குறிப்பிட்ட சில காட்சிகளில் அனல் பறக்கும் வசனங்களை தனக்கேயுரிய ஸ்டைலில் உருவாக்கியிருக்கிறாராம் சீமான்.

சீமானின் வாயால் சென்சாரில் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள் என்றும் தோன்றுகிறது. சரி, தலைவருக்கு ஜோடி யாராம்? புரட்சி, கிளர்ச்சி என்று வாதாடுகிற ஹீரோக்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடுமா அதெல்லாம்? வலையை வீசியிருக்கிறார்களாம். எந்த புரட்சிக்காரி மாட்டுகிறாரோ?

விக்ரமை இயக்கும் விக்ரம் குமார்

இரண்டு வருடங்களுக்கு மேலாக சுசி கணேசன் அப்படி இப்படி என்று பார்த்து பார்த்து ஏகப்பட்ட பில்டப்களோடு உருவாக்கிய படம் ‘கந்தசாமி’.
வசூல் மழை... அப்படி... இப்படி... என படம் வெளிவந்த பிறகு சொல்லிக் கொண்டிருந்தாலும் ‘கந்தசாமி’ கொஞ்சம் நொடிந்தசாமியாகவே ஆகிவிட்டார். சரி... அதுக்கென்ன பண்றது அடுத்த வேலைகளில் இறங்கிட வேண்டியதுதான்... ம்... இறங்கிவிட்டார் விக்ரம்.
 
‘யாவரும் நலம்’ படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி உள்ளார் விக்ரம். படத்தின் கதை பற்றி மூச்சு விட மறுக்கிறார் விக்ரம் குமார். ஆனாலும் இந்தப் படத்திலும் விக்ரம் நடிப்பிற்கு ஏற்ற கேரக்டர் இருக்குமாம். இலியானா இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடி சேருகிறார்.

நடிப்புக்கு நயனதாரா முழுக்கு-விரைவில் பிரபு தேவாவுடன் டும்டும்?

நயனதாரா, பிரபுதேவா நட்பு மேலும் இறுகிப் போயுள்ளதாகவும், விரைவில் எதிர்ப்புகளை மீறி கல்யாணத்தில் போய் அது முடியும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக நயனதாரா தனது கவர்ச்சி நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டார். விரைவில் நடிப்புக்கே குட்பை சொல்லப் போகிறார்கள் என்று குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரபுதேவாவின் கல்யாணம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தன்னுடன் நடனம் ஆடி வந்த ரமலத் என்பவரை காதலித்து வந்த பிரபுதேவா ரகசியமாக அவரை மணந்து கொண்டார்.

அதன் பின்னர் இருவரும் சில காலம் தனியாக குடித்தனம் நடத்தி வந்தனர். பின்னர் குடும்பத்தினருடன் சமரசம் ஏற்பட்டு அனைவரும் இணைந்தனர்.

இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள். அதில் ஒரு குழந்தை சில மாதங்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்து பிரபுதேவா குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

ஆனால் அந்த சோகத்திலிருந்து விடுபடுவதற்கு முன்பாகவே பிரபுதேவா தனது மனைவிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார். அது நயனதாராவுடன் அவர் கொண்ட திடீர் காதல்.

தன் மீது பெரும் அன்பும், ஆதரவும், காதலும் கொண்டிருந்த பிரபுதேவா இப்படி திடீரென நயனதாரா மீது காதல் கொண்டது அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. தன்னை விட்டு பிரபுதேவா போய் விட மாட்டார் என்ற பெரும் நம்பிக்கையுடன் உள்ளார். கோவில் கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் மறுபக்கம், நயன், பிரபுதேவா காதல் மேலும் மேலும் இறுகியபடி உள்ளதாம். வாழ்ந்தால் பிரபுதேவாவுடன்தான் வாழ்வேன் என்பதில் நயன்தாரா உறுதியாக உள்ளாராம். பிரபுதேவாவும் அப்படியே. அதேசமயம், இருவரும் சேர்ந்து பிரபுதேவாவுடன் வாழலாம் என்று நயன்தாரா கொடுத்த பார்முலாவை கண்ணை மூடிக் கொண்டு நிராகரித்து விட்டாராம் ரமலத்.

இருப்பினும் இதுகுறித்து நயன்தாராவும் சரி, பிரபுதேவாவும் சரி கவலைப்படாமல் உள்ளனராம். சமீபத்தில் நயனதாராவுக்காக தான் இந்தியில் முதன் முறையாக இயக்கியுள்ள வான்டட் படத்துக்குக் கூட்டிச் சென்று காண்பித்தார்.

இந்த நிலையில் நயனதாரா நடிப்புக்கு முழுக்குப் போடப் போவதாகவும், விரைவில் பிரபு தேவா - நயன் கல்யாணம் நடக்கப் போவதாகவும் மும்பை மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதை உறுதிப்படுத்துவது போல நயனதாராவின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. நயனை தெலுங்கில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் விநாயக். தற்போது ஜூனியர் என்.டி.ஆர்., நயனதாராவை வைத்து அதுர்ப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அதில் கவர்ச்சிகரமான உடை அணிய வேண்டும் என்று அவர் நயனிடம் கூறியபோது மறுத்து விட்டாராம். இதை விட கவர்ச்சிகரமான டிரஸ் முன்பு போட்டு நடித்தவர்தானே என்று அவர் ஆச்சரியத்துடன் நயனிடம் கேட்டபோது, அது அப்ப, இப்ப இப்படித்தான் என்று கூறி விட்டாராம நயன்.

கவர்ச்சிகரம் வேண்டாமே என்று பிரபு தேவா கேட்டுக் கொண்டதன் பேரிலேயே கவர்ச்சிக்கு விடை கொடுத்து விட்டாராம் நயனதாரா. அப்படியே படிப்படியாக படங்களையும் குறைத்துக் கொள்ளவும், பின்னர் திடுதிடுப்பென கல்யாணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம் நயனதாரா.

கோடம்பாக்கத்தில் விரைவில் 'குண்டு' வெடிக்கலாம்..!