Tuesday, August 18, 2009

எவண்டா அது? தனுஷ் ஆத்திரம்...

எவண்டா அது? ஆத்திரத்தில் ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறார் தனுஷ். பல இளசுகளின் இப்போதைய பொழுது போக்கு ஃபேஸ்புக் தான்.
பாலிவுட், டோலிவுட், கோலிவுட், என்று எல்லா ஏரியாவையும் ஆட்டிப்படைக்கும் இந்த இணைய தளத்தில் தனுஷ் பெயரில் ஒரு ஆசாமி நுழைந்து ஆயிரக்கணக்கானவர்களை தில்லாலங்கடி ஆக்கியதுதான் தனுஷின் கோபத்திற்கு காரணம்.

ஃபேஸ்புக் ஏரியாவில் பிரபலம் என்றால் அது சிம்பு, நயன்தாரா ஃபேஸ்புக்குகள்தான். அதிலும் நயன்தாராவின் வலைக்குள் நுழைந்தால், தினந்தோறும் தனது படத்தை போட்டு அது குறித்த தகவல்களையும் அளிக்கிறார். த்ரிஷாவின் புகைப்படம் ஒன்றை போட்டு, இது நானே எடுத்ததாக்கும் என்று நயன்தாரா பெருமை அடித்துக் கொள்வதையும் ரசிக்க முடிகிறது. ஆனால், இந்த ஃபேஸ்புக் அட்ரஸ் நயன்தாரா என்ற பெயரில் இல்லை. அவரது ஒரிஜனல் பெயரான டயானா மரியம் குரியன் என்ற பெயரிலேயே துவங்கப்பட்டுள்ளது.

பல நடிகர் நடிகைகள் நேரடியாகவே இதில் தகவல்களை பரிமாறிக் கொள்வதால், ரசிகர்களும் உண்மை என்று நம்பிதான் தொடர்பு கொள்கிறார்கள். அப்படிதான் தனுஷ் ஃபேஸ்புக்கிலேயும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் நடமாட்டம். தனுஷ் கஸ்தூரிராஜா என்று துவங்கப்பட்டிருக்கும் இதில் நாள்தோறும் ரசிகர்களிடம் சாட்டிங்கில் பேசி வந்திருக்கிறார் இந்த நபர். விஷயம் இப்போதுதான் தனுஷின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. அவ்வளவுதான். அந்த நபரை கண்டுபிடிக்கும்படி சைபர் க்ரைமில் புகார் செய்யப் போகிறாராம்.

ரஜினி துவக்கிவைத்த இணையதளம்

ஃபோர் பிரேம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் ப்ரியதர்ஷனும் அவரது மனைவி லிசி ப்ரியதர்ஷனும் இணைந்து தமது நிர்வாகத்தின் கீழ் நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியான, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘காஞ்சிவரம்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது.
இதில் காஞ்சிவரம் படத்திற்கு விருது கிடைத்துள்ளது. படத் தயாரிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வரும் ஃபோர் பிரேம்ஸ் நிறுவனத்திற்கு ஃபோர் பிரேம்ஸ் என்ற பெயரில் ப்ரிவியூ தியட்டரும் உள்ளது. அது மட்டுமின்றி சினிமா தயாரிப்புக்குத் தேவையான பல்வேறு துறைகளை தன்னுள்ளே கொண்டுள்ள இந்நிறுவனம் இப்போது தனது இணைய தளத்தை துவங்கியுள்ளது.
இந்த இணையதளத்தை நடிகர் ரஜினிகாந்த் துவக்கி வைத்தார். இந்த இணையதளத்தில் ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டர், டப்பிங், எடிட்டிங், கேமரா சம்பந்தமான அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.