Friday, October 9, 2009

‘சூர்யாதான் நம்பர் ஒன்’; கே.எஸ்.ரவிக்குமார்

படத்துக்கு படம் வித்தியாசப்பட, சூர்யாவின் ரேட்டிங் இப்போது மேலே.. மேலே.. மேலே ஏறிடுச்சு. K.S.ரவிகுமார் காம்பினேஷனில் கலக்கியுள்ள ‘ஆதவன்’ தீபாவளிக்கு வெளிவரவுள்ள நிலையில் ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
சென்னையில் இன்று மீடியாக்களுக்கான ‘ஆதவன்’ தீனியை வழங்க வந்திருந்தார் சூர்யா. கூடவே இயக்குனர் K.S.R. மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி. நாயகி நயன்தாரா ஆப்செண்ட். “ அவங்களேட பர்சனல் மேட்டர் எழுதினதுல, அந்த பொண்ணு பொம்பவே அப்செட் ஆகிட்டாங்க. அதுனாலதான் இங்க அவங்க வரல” என காரணம் தெரிவித்த ரவிக்குமார், “ஒரு படம் நல்லா இருக்கு நல்லா இல்லைன்னு எழுத உங்களுக்கு (பத்திரிகைகள்) உரிமைஇருக்கு ஆனா அந்த படத்தை பார்க்கக்கூடாதுன்னு எழுத உங்களுக்கு உரிமை இல்லை” என அறிவுறுத்தினார்.

சூர்யாவுக்கும் சேர்த்து ஒரு அறிவிரை சொன்னார் K.S.R. அது....

“இன்றைய இளம் நடிகர்களில் ரொம்ப டெடிகேஷனாக இருப்பதில், நடிப்பை நேசிப்பதில் சூர்யாதான் நம்பர் ஒன். நாளைக்கு என்ன சீன் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ஹோம் ஒர்க் செய்து ஸ்பாட்டில் அசத்தும் ஒரு திறமைசாலி. வித்தியாசமான கதைகளில் நடிக்கவேண்டும், பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வெறி அவருக்குள் நிறையவே இருக்கிறது. அதற்காக நிறைய ரிஸ்க் எடுக்கிறார். அதை மட்டும் அவர் குறைத்து கொள்ளவேண்டும். வாழ்க்கை என்பது ஒருமுறைதான். உங்களை நம்பி தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் மட்டுமமின்றி குடும்பமும் இருக்கிறது” என்றார்.

“இந்த படத்துல பத்து வயசு பையனா நடிக்கிறேன். இருபது நிமிடங்கள் வரும் ப்ளாஷ்பேக்கில்தான் அப்படி வருகிறேன். இதன் கிராபிக்ஸ் வேலைக்கு மட்டும் நாலரை கோடி ரூபாய் கேட்டார்கள். டைரக்டரோட கிரியேட்டிவிட்டினாலதான் இந்த சீனே உருவானது. அதற்காக அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன். சரோஜாதேவி மேடத்துடன் நடித்த அனுபவம் என்னால் மறக்க முடியாது. நிறைய விஷயங்களை அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டேன்” என்றார் சூர்யா.

தெலுங்கில் ஷம்மு

தசாவதாரம் படத்தில் சின்ன வேடத்தில் நடித்தவர் ஷம்மு. ப்‌ரியதர்ஷனின் காஞ்சீவரம் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது. இந்த இரு படங்களைத் தொடர்ந்து கரணுடன் மலையன் படத்தில் நடித்தார். தற்போது மாத்தியோசி படத்தில் நடித்து வருகிறார்.

வ‌ரிசையாக படங்கள் இருந்தாலும் ஷம்முக்கு ஒரு வருத்தம். அவர் முதல் முதலாக நடித்த மயிலு இன்னும் வெளியாகவில்லை. ‌‌ஜீவன் இயக்கிய இந்தப் படத்தை பிரகாஷ்ரா‌ஜின் டூயட் மூவிஸ் தயா‌ரித்திருந்தது.

தமி‌ழி‌ல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தெலுங்குப் படங்களிலும் வாய்ப்புகள் ஷம்முவை தேடி வருகிறது. முக்கியமாக பொம்ம‌ரிலு ஹிட் படத்தை கொடுத்த பாஸ்க‌ரின் அடுத்தப் படத்தில் ஷம்மு நடிக்கிறார். படம் ஹிட்டானால் தமிழ் ரசிகர்கள் ஷம்முவை மறந்துவிட வேண்டியதுதான்.

யாருக்கெல்லாம் ஆப்பு... லிஸ்ட் ரெடி

பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் ஆபாசமாக வார்த்தைகளால் சில நடிகர்கள் பேசினார்கள். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில பத்திரிகைகள் யாரெல்லாம் பேசியாது... என்னவெல்லாம் பேசினார்கள் என்பதைக் கவனமாக பேசினார்கள் என்பதைக் குறித்துக் கொண்டு அவர்களுடைய செய்திகளை எல்லாம் இனிமேல் பத்திரிகைகளில் வெளியிடக் கூடாது. அவர்கள் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று முடிவு செய்துள்ளன. அந்த லிஸ்ட் விவேக், சேரன், சத்யராஜ் என்று போய்க் கொண்டிருக்கிறது. இது தமிழ் சினிமாகாரர்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா

சூப்பர் ஸ்டார் படத்தில் ஆரம்பித்து சுள்ளான் நடிகர் படம் வரை திருவிழா காலங்களில் ஒரு டஜன் படங்களாவது வெளிவந்த நிலையெல்லாம் போயே போச். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது இப்போது.

இந்த தீபாவளிக்கு வெளிவரும் படங்களின் எண்ணிக்கையை ஒரு கை விரல்களிலேயே எண்ணிவிடலாம். இதுவரை உறுதி செய்யப்பட்ட தகவல்படி நான்கு படங்களே வெளிவரவுள்ளது. சூர்யா, ஜெயம் ரவி படங்களுடன் போட்டிப்போடப்போவது நமீதா நடித்துள்ள ‘ஜகன் மோகினி’ படம்தான்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன் நிறுவனம் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ள ‘ஆதவன்’ படம் இந்த லிஸ்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சூர்யா- நயன்தாரா நடித்துள்ளனர். அடுத்த இடத்தில் ஜெயம்ரவியின் ‘பேராண்மை’ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இயற்கை’, ‘ஈ’ படங்களை இயக்கிய ஜனநாதன் இயக்கத்தில் வெளிவரும் மூன்றாவது படம் இது.

ஒரே படத்தில் ஸ்டார் அந்தஸ்தை பிடித்த ஜெய்யின் ‘அதே நேரம் அதே இடம்’ படமும் நமீதாவின் ‘ஜகன்மோகினி’படமும் தீபாவளி போட்டியில் களமிறங்குகின்றன. கடைசி நேரத்தில் சிறு பட்ஜெட் படங்கள் ஏதாவது போட்டியில் பங்கேற்கலாம்.

பிரகாஷ்ரா‌ஜின் பிரமாண்ட பிளான்

மொழியைவிட அபியும் நானும் படம்தான் பிரகாஷ்ரா‌ஜின் மனதுக்கு நெருக்கமான படம். அதனால் கன்னடத்தில் அந்தப் படத்தை அவரே ‌‌ரீமேக் செய்கிறார். அவரே ‌‌ரீமேக் செய்கிறார் என்பதன் பொருள், படத்தை அவர் தயா‌ரிக்கிறார் என்பது மட்டுமல்ல, படத்தை இயக்குவதும் அவர்தான்.

கன்னடம் தாய்மொழி என்பதால் இயக்குனராக தனது கன்னி முயற்சியை கன்னடத்தில் மேற்கொள்கிறாரா என்று கேட்டதற்கு பிரகாஷ்ரா‌ஜிடமிருந்து வந்த பதில், நோ. "அபியும் நானும் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனால் கன்னடத்தில் ‌‌ரீமேக் செய்கிறேன். இந்தியில் படத்தை ‌ரீமேக் செய்யும் எண்ணமும் இருக்கிறது."

ஆனால், அவரை முந்திக் கொண்டு படத்தின் இந்தி ‌‌ரீமேக் உ‌ரிமையை பிரகாஷ்ரா‌ஜிடமிருந்து வாங்கியிருக்கிறார் போனி கபூர். படத்தை இயக்கப் போவது பிரகாஷ்ரா‌ஜ் அல்ல. இந்தியைச் சேர்ந்த வேறொருவர்.

ராதாமோகனின் அடுத்தப் படமான பயணத்தில் நாகார்ஜுனுடன் பிரகாஷ்ராஜும் முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக வெள்ள நிவாரணம்: கை கொடுக்கும் இன்போசிஸ்!

பெங்களூர்: வடக்கு கர்நாடகத்தில் வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்காக ரூ. 60 கோடி மதிப்பீட்டில் 6000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க இன்போசிஸ் நிறுவனமும், பயோகான் நிறுவனமும் முன்வந்துள்ளதாக முதல்வர் [^] எதியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்போசிஸ் மற்றும் பயோகான் ஆகிய இரு பெரும் நிறுவனங்களும் வெள்ளம் [^] பாதித்த பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க முன்வந்துள்ளன.

பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் வடக்கு கர்நாடகத்தின் 12 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஏராளமான வீடுகள் சிதைந்து போய் விட்டன. லட்சக்கணக்கான மக்கள் [^] பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னதாக இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி மற்றும் பயோகான் தலைவர் கிரண் மஜூம்தார்ஷா ஆகியோர் எதியூரப்பாவை சந்தித்துப் பேசினர். அப்போது தங்களது நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளைச் செய்யும் என்று உறுதியளித்தனர்.

இந்தத் திட்டத்தின்படி இன்போசிஸ் நிறுவனம் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் 3000 வீடுகளைக் கட்டிக் கொடுக்கும். ஒவ்வொரு வீடும் ரூ. 1லட்சம் செலவில் கட்டப்படும். அதேபோல பயோகான் நிறுவனமும் இதே அளவிலான வீடுகளை, இதே செலவில் கட்டித் தரும்.

அதேபோல விப்ரோ நிறுவனமும் அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தனது பங்கை அது தெரிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர பெங்களூரைச் சேர்ந்த குர்லான் மெத்தைகளைத் தயாரிக்கும் பிரபல செஞ்சுரி குழுமம், ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 2000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது.

அமால்கமேட்டட் பீன்ஸ் காபி விற்பனை நிறுவனம் ரூ. 10 கோடி முதலீட்டில் 1000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைவரான சித்தார்தா, மத்திய வெளியுறவு அமைச்சர் [^] எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கன மழை மற்றும் வெள்ளத்தால் 3 லட்சத்து 58 ஆயிரத்து 755 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன அல்லது சேதமடைந்துள்ளன என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசும் வெள்ள நிவாரண நிதியை சேகரித்து வருகிறது. இந்த நிதிக்கு 2 நாட்களில் ரூ. 320 கோடி அளவுக்கு நிதி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Thursday, October 8, 2009

உச்சத்தில் சந்தியா

‘காதல்’ படத்தில் அறிமுகம் ஆன சந்தியா அதன்பிறகு நடித்த படங்களில் பல பிளாப் ஆகின. ஆனாலும் அம்மணி கீழே விழாமல் நின்று கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் என்னவோ ஏதோ என்று ஆராய்வது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் இப்போது சந்தியா எக்கச்சக்க பிஸியாக இருக்கிறார். கையில் வரிசையாக தமிழ் படங்கள். இது போதாது என்று தெலுங்கில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தலை கால் புரியாத சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கும் சந்தியா, இன்னும் சில வருடங்களில் தமிழ் சினிமாவின் நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பாராம். அந்த இடத்தை நோக்கி தான் இப்போது போய்க்கொண்டிருக்கிறாராம்.

அதுவரைக்கும் தாக்குப்பிடிப்பீங்களா...?

'பிக் பிரதர்'-ஷமிதாவுக்கு ஷில்பா அட்வைஸ்!

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் தங்கச்சி ஷமிதா ஷெட்டியிடம், இயல்பாக இரு என்று அறிவுரை கூறியுள்ளாராம் பிக் பிரதர் போட்டியில் வென்ற அக்கா ஷில்பா ஷெட்டி. 2007ம் ஆண்டு லண்டனில் நடந்த பிக் பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடியவர் ஷில்பா. அதன் பிறகு அவரது ரேஞ்சே மாறிப் போய் விட்டது. இந்த நிலையில், பிக் பிரதர் நிகழ்ச்சியின் இந்தியப் பதிப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் ஷில்பாவின் தங்கச்சியும், நடிகையுமான ஷமிதா ஷெட்டி பங்கேற்கிறார்.

அக்காவைப் போல தங்கச்சியும் வெற்றி யைத் தட்டிச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஷமிதாவுக்கு, ஷில்பா ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் கொடுத்துள்ளாராம். இதுகுறித்து ஷமிதா கூறுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கப் போவதாக தெரிய வந்தவுடன் அதுகுறித்து ஷில்பா எந்தக் கருத்தும் சொல்லவில்லை. நீயே முடிவு செய்து கொள் என்று மட்டும் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து நான் முடிவெடுப்பதிலும் அவர் தலையிடவில்லை. அவர் கொடுத்த ஒரே அட்வைஸ் - நீ நீயாகவே இரு என்பது மட்டுமே என்றார்.

தற்போது மும்பையின் ஆம்பி வேலியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டுள்ளது.

2000மாவது ஆண்டில் மொஹாபதீன் என்ற படம் மூலம் நடிக்க வந்தவர் ஷமிதா. ஆனால் ஒரு படமும் அவருக்கு உருப்படியாக தேறவில்லை. கிட்டத்தட்ட ஷில்பாவின் ராசிதான் ஷமிதாவுக்கும்.

இந்த நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி அவரைத் தேடி வந்துள்ளது. பிக் பிரதருக்குப் பிறகுதான் ஷில்பாவுக்கு ஏற்றம் ஏற்பட்டது. அதேபோல பிக் பாஸுக்குப் பிறகு ஷமிதாவின் மார்க்கெட் ரேஞ்சும் மாறலாம் என்ற பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது.

கலர்ஸ் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இதில் பூனம் தில்லான், கிளாடியா சிசெலா, கமால் கான், ஷெர்லின் சோப்ரா, விந்து தாரா சிங் ஆகியோரும் உள்ளனர்.

மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு நிகழ்ச்சியை காம்பியரிங் செய்வது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து அளித்தவர் ஷில்பா ஷெட்டி என்பது நினைவிருக்கலாம்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி

ஏ.ஆர். ரஹ்மான் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் தமது இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். இந்நிகழ்ச்சி ஷக்தி அறக்கட்டளை மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உளள மார்க் ஸ்வர்ணபூமியில் 11ஆம் தேதி நடக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக் காண சுமார் முப்பதாயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களை அவரது இசையில் ஹரிகரன், சாதனாசர்கம் உள்பட பல புகழ்பெற்ற பாடகர்கள் பாடுகிறார்கள்.

விபச்சார பெண்கள் பற்றி செய்தி போடாதீர்கள் - ரஜினி உருக்கம்

இரண்டு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் விபச்சாரத்தில் இறங்கும் பெண்களைப் படம் பிடித்து செய்தி போடுவது சரியில்லை. இதைப் பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும் என்றார் நடிகர் ரஜினிகாந்த். அக்டோபர் 7 புதன்கிழமை நடந்த நடிகர் சங்க அவசரக் கூட்டத்தில் பங்கேற்று ரஜினி பேசியதாவது:

பொதுவா எனக்குக் கோபம் வந்தா அதிகம் பேசமாட்டேன். ரிலாக்ஸான மைன்ட்ல இருக்கும்போது நிறையப் பேசுவேன். இப்போ நான் ரொம்ப கோபமா இருக்கேன்.

அந்தப் பத்திரிகையில போட்டோவோட செய்தி பார்த்தப்போ எனக்கே மனசு சரியில்லை. ஒருவேளை ஏப்ரல் ஒண்ணா இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா தேதியைப் பார்த்தப்போதான் இது சீரியஸ் மேட்டர்னு புரிஞ்சது. ஒரு வேலையும் ஓடல. என்ன செய்யுறதுன்னே தெரியல.

பொதுவா விபச்சார வழக்குகளில் கைதாகும் பெண்களை பர்தா போட்டு மூடி போலீசார் அழைச்சிட்டுப் போறதை படம் பிடிச்சி போடறதை பார்க்கும்போதே மனசுக்கு கஷ்டமா இருக்கும். பத்திரிகைகள் தயவு செய்து இதைச் செய்யக்கூடாது.

சோத்துக்குத்தானே தப்பு செய்றாங்க...

கேவலம், ரெண்டு வேளை சோத்துக்குதானே இவங்க அப்படி தப்பு செய்றாங்கன்னு தோணும். தப்பு செஞ்ச அவங்க மேலேயே நமக்கு இவ்வளவு அனுதாபம் வரும்போது, தவறே செய்யாத இங்க உட்கார்ந்திருக்கிற நம்ம சகோதரிகளைப் பத்தி போட்டோவோட நியூஸ் வந்தா அவங்க மனசு என்ன பாடுபடும்...

நான் சொல்றேன்... நீங்க தப்பு செஞ்சீங்களா இல்லையான்னு உங்களுக்குத் தெரியும். உங்க உறவுக்காரங்க, அப்பா அம்மா, பிள்ளைங்களுக்குத் தெரியும... அந்த ஆண்டவனுக்குத் தெரியும்... இதெல்லாம் ஒண்ணுமில்லை... மனசைத் தளர விடாதீங்க.

நான் கேட்கிறதெல்லாம்... உண்மையிலேயே இவங்க தப்பு செஞ்சிருந்தாங்கன்னா, அதை ஆதாரத்தோட நிரூபிச்சி தண்டனை வாங்கிக் கொடுங்க. ஆனா இப்படி ஆதாரமில்லாம போட்டோ போட்டு அசிங்கப்படுத்தக்கூடாது. நான் ரொம்ப நேரம் பேசினா உணர்ச்சிவசப்பட்டுடுவேன். அதனால இதோட முடிச்சிக்க விரும்பறேன்.

இப்போ கடைசியா ஒரு நல்ல செய்தி வந்திருக்கு... அந்த நியூஸ் போட்ட பத்திரிகை ஆசிரியரை கைது பண்ணியிருக்கிறதா செய்தி வந்திருக்கு. காவல் துறையினருக்கு நன்றி... இந்த அதிரடி நடவடிக்கை எடுத்த முதல்வர் கலைஞருக்கும் நன்றி தெரிவிச்சிக்கிறேன்... என்றார் ரஜினி.

Sunday, October 4, 2009

அபிஷேக்குடன் இணையும் ஆசின்

Asin
ஆசின் அடுத்தபடியாக பாலிவுட் [^] சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அபிஷேக் பச்சனுடன் இணையவுள்ளார். இப்படத்தை அசுதோஷ் கோவரிகர் இயக்குகிறார்.

ஆமிர்கான், சல்மான் கான் என போய்க் கொண்டிருக்கும் ஆசினின் அடுத்த ஸ்டாப் அபிஷேக் பச்சன் என்பது உறுதியாகியிருக்கிறது.

கலின் ஹம் ஜீ ஜான் சே என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்காக அபிஷேக்குடன் இணைகிறார் ஆசின். அசுதோஷ் கோவரிகர் இப்படத்தை இயக்குகிறார். சிட்டகாங் புரட்சி குறித்த கதையாம் இது.

இப்படத்தில் மாஸ்டர்தா என அழைக்கப்படும் சுர்ஜ்யா சென் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அபிஷேக். சுர்ஜ்யா சென்தான் சிட்டகாங் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர் ஆவார்.

அபிஷேக்கும், ஆசினும், கோவரிகருடன் இணைவது இதுவே முதல் முறையாகும். இந்தப் படத்தை பிவிஆர் பிக்சர்ஸுடன் இணைந்து கோவரிகர் தயாரிக்கவுள்ளார்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு [^] நவம்பர் 25ம் தேதி வாக்கில் தொடங்குகிறதாம்.

ஆசின் இந்தியில் 2வதாக நடித்துள்ள லண்டன் [^] ட்ரீம்ஸ் (நாயகன் சல்மான் கான்) படம் அக்டோபர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. கஜினி என்ற பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து வரும் படம் என்பதால் ரிசல்ட் குறித்து நகத்தை கடித்தபடி காத்திருக்கிறார் ஆசின்.

இந்த நிலையில் அவருடைய 3வது படம் உறுதியாகி விட்டது.

சமீபத்தில்தான் கோவரிகரின் படமான வாட்ஸ் யுவர் ராசி வெளியாகி பெரும் பிளாப் ஆனது. இந்த நிலையில், தனது அடுத்த படத்தை 'சிக்'கென தர தீவிரமாக உள்ளார் கோவரிகர்.

தமன்னாவுக்காக மோதும் கார்த்தி

படப்பிடிப்பை முடிக்கும் தருவாயை நெருங்கியுள்ளது கார்த்தி தமன்னா நடிக்கும் ‘பையா’ படம். இந்தப் படத்தில் கார்த்திக் பதினெட்டு வில்லன்களுடன் மோதுகிறார். லிங்குசாமி தமது சொந்த பட நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தயாரித்து இந்தப் படத்தை இயக்கியும் வருகிறார். இந்தப் படத்தின் எண்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்வது என முடிவு செய்துள்ளார் லிங்குசாமி. தமன்னாவை வில்லன்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக அவர்களிடம் மோதும் கார்த்தி சுமார் பதினெட்டு வில்லன்களுடன் மோதுகிறாம். மும்பையைக் கலக்கும் தாதா கேரக்டரில் சோமன் நடிக்கிறார். தமன்னாவைக் காப்பாற்ற இத்தனை பேருடன் மோதுகிறீர்களே... கவனமா மோதுங்க... என்று படப்பிடிப்பில் உள்ளவர்களே அவரை கலாய்க்கிறார்களாம்....

அப்படி சொல்லவே இல்லை... - வழக்குக்கு பின் நடிகைகள்!

உழவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதுன்னு சொல்வாங்க. நடிகை இறங்கி வந்தா வழக்கு கூட தங்காதுன்னு சொல்ற மாதிரி அடுத்தடுத்து இரண்டு சம்பவம்.
 
மதன் படத்தில் தனக்கு டூப் போட்டுவிட்டதாக பேட்டியளித்து பரபரப்பை கிளப்பிய சுனைனா, அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லை. படத்திலே இருப்பது நான்தான் என்று கூறியிருக்கிறார்.

கவர்ச்சி காட்சியில் தனக்கு பதிலாக தனது சாயல் உள்ள ஒருவரை நடிக்க வைத்து ஏமாற்றிவிட்டதாக ஜெய் ஆகாஷ் மீது புகார் கூறியிருந்தார் சுனைனா. இது டூப்பா, அல்லது சுனைனாதானா? என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதுவரை கொடுக்காமல் வைத்திருந்த மிச்ச படங்களையும் கொடுத்து பிரச்சனையை பெட்ரோல் ஊற்றி எரிய விட்டார் ஜெய் ஆகாஷ். அதற்கு பிறகும் இவர் மீது சுனைனாவின் எரிச்சல் ஓவராக விழ, என்னை அவமானப்படுத்திய அவர் மீது வழக்கு தொடருவேன் என்றார் ஜெய். அவ்வளவுதான். அத்தனையும் பொய் என்று குரல் கொடுத்த சுனைனா கப்சிப். அந்த படத்தில் இருப்பது நான்தான். சின்ன பொண்ணா இருக்கும் போது தெரியாம நடிச்சிட்டேன். இப்போ அதை வெளியிடணுமா? என்று இறங்கி பேச ஆரம்பித்திருக்கிறார்.

இதே மாதிரி இறங்கி வந்திருக்கிற இன்னொரு நடிகை சினேகா. திருச்சியில் நகைக்கடை திறக்கப் போன இடத்தில் தனது இடுப்பை கிள்ளியதாக ஒரு நபரை அடையாளம் காட்ட, அவரை நைய புடைத்துவிட்டார்கள் செக்யூரிடிகள். பிரச்சனை போலீஸ் வரைக்கும் போனது. பின்னர் அடிபட்டவரின் மனைவி சினேகா மீது வழக்கு தொடுப்பேன் என்று எச்சரிக்க, சினேகாவும் தனது விளக்கத்தை கொடுத்திருக்கிறார். என்னவென்று?

இவர்தான் இடுப்பை கிள்ளினார் என்று நான் யாரையும் அடையாளம் காட்டவில்லை. அவர்களே யாரையோ பிடித்து அடித்துவிட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் அடித்ததெல்லாம் மறுநாள் செய்திதாள் படித்துதான் எனக்கே தெரியும் என்று கூறியிருக்கிறார்.

நயன்தாரா.... -புலிவால் பிடித்த சேச்சி?

எம்எம்டிஏ காலனியில் மழை வெள்ளம் சூழ்ந்து, வீட்டை விட்டு மக்கள் வெளியேற முடியாத சூழ்நிலை. ஒரு குடும்ப தலைவி தனது குழந்தைகளுடன், முதல் மாடியிலேயே கொட்ட கொட்ட விழித்திருக்க, அவரது வீட்டுக்கு கிட்டதட்ட நீந்தியே வந்தார்கள் சிலர்.
 
எங்கோ வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நயன்தாரா தங்களுக்கு உத்தரவிட்டதாக கூறி அவர்கள் கொடுத்த அன்பளிப்பில் ஒரு மாதம் வாழ்வதற்கான அத்தனை பொருட்களும் இருந்தன. சம்பந்தப்பட்ட பெண்மணி நயன்தாராவுடைய ஒப்பனையாளரின் மனைவி. எங்கோ இருக்கிற ஒரு குடும்பத் தலைவிக்காக உலகின் எங்கேயோ ஒரு மூலையில் இருந்தபடி கவலைப்பட்ட நயன்தாரா, இன்னொரு குடும்ப தலைவியை கண்கலங்க விட்டிருக்கிறாரே, என்னவொரு கசப்பான முரண்பாடு?

உதிர்ந்த ரோமம், வானளாவிய அதிகாரம் போன்ற சொற்களுக்கு இணையாக இன்று மக்களால் அதிகம் விவாதிக்கப்படுகிற வார்த்தையாகி இருக்கிறது 'அருகதை இல்லை'

ரமலத்தை பார்த்து நயன்தாரா சொன்ன வார்த்தைதான் இது. பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று செய்திகள் வந்தபோதெல்லாம் அது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த ரமலத், இரண்டாவது முறையாக வாய் திறந்தபோதுதான் நிலவரம் கலவரமாகிப் போனது. அந்த பேட்டியில் "இனிமேல் என் கணவருடன் நயன்தாராவை சேர்ந்து பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன்" என்று கூறியிருந்தார் ரமலத். அதுமட்டுமல்ல, "எதற்காக இங்கு வந்தாரோ, அந்த வேலையை மட்டும் பார்க்கட்டும்" என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த நயன்தாரா சொன்ன வார்த்தைதான் "எனக்கு அட்வைஸ் பண்ண ரமலத்துக்கு அருகதை இல்லை" என்பது!

அதன்பின் இருவரும் மாற்றி மாற்றி மீடியாக்களில் குமுறிக் கொண்டார்கள். இறுதியாக நடக்கப்போவது என்ன? கோடம்பாக்கத்தில் மிக முக்கியமான சிலரை தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டினோம். கிடைத்தவை எல்லாமே அதிர்ச்சி ரகம். இன்னும் சில நாட்களுக்குள்ளாகவோ, அல்லது இந்த கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போதோ, நயன்தாராவிடமிருந்து ஒரு அறிக்கை வந்திருக்கக் கூடும். என்னவென்று? "எனக்கும் பிரபுதேவாவுக்கும் இருந்த காதலை, நானே முன் வந்து தியாகம் செய்கிறேன்" என்று. "ஒரு குடும்பத்தை பிரித்த பாவம் எனக்கு வேண்டாம்" என்று அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப் போகிறாராம் நயன்.

"ஆறு மணிக்கு மேலே நான் என்ன செய்யுறேன்னு வேவு பார்க்கிற உரிமை எவனுக்கும் இல்லே" என்று இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த சிலரிடம் நெருப்பை உமிழ்ந்த நயன்தாரா, இப்படி ஒரு திடீர் முடிவெடுத்ததற்கு காரணம்? மிக முக்கியமானவர்கள் அவருக்கு செய்த அட்வைஸ்தானாம். யார் சொல்லியும் கேட்காத நயன், இந்த விவகாரத்தில் இருக்கும் சாதக பாதகங்களை அலசி ஆராய்கிற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். அதன் விளைவுதான் இப்படி ஒரு அறிக்கையை தர முன் வந்ததும்!

அடிப்படையில் நயன்தாரா எப்படி? அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலேயே பேச ஆரம்பித்தோம். வந்து விழுந்த தகவல்கள் அதிர்ச்சியோ அதிர்ச்சி. கலகலப்பானவர். அவரது ஆசை நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். சரியாக சொல்லப் போனால் குடும்ப வாழ்வுக்காக ஏங்குகிறார் நயன்தாரா. சிம்புவுடனான இவரது காதல் நிஜம். அதன் பின் விஷாலுடன் ஏற்பட்ட தீவிர காதலும், முளையிலேயே கருகிப்போனது. தன் முயற்சியில் சற்றும் தளராத இந்த விக்கிரமாதித்தி, வில்லு பட நேரத்தில் விஜயையும் காதலித்தார் என்பதுதான் ஷாக்கான செய்தி. ஆனால், அவரோ இந்த விஷயத்தில் கடுமையான மவுன விரதம் இருக்க, தாங்க முடியாத ஈகோவால்தான் பிரபுதேவாவை காதலிக்க துவங்கினாராம். விஜயை வெறுப்பேற்ற என்று எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை. அதுதான் இப்போது புலிவால் பிடித்த சேச்சியாக்கிவிட்டது நயன்தாராவை என்று சொன்ன அவர்கள், தொடர்ந்து சொல்லும் தகவல்கள்தான் படுபயங்கர ஷாக். "இவ்வளவு பிரச்சனைகள் நடந்து வரும் இந்த நேரத்தில் கூட அவர் தெலுங்கு ஹீரோக்களான ரவிதேஜா, ஜுனியர் என்டிஆர் போன்ற ஹீரோக்களுடன் ஊர் சுற்றுவதையும் நள்ளிரவு பார்ட்டிகளையும் நிறுத்தவில்லை" என்கிறார்கள்.

காதல் வேறு, கல்யாணம் வேறு, கலகலப்பு வேறு என்பதுதான் அவரது பாலிஸி. இப்படிப்பட்ட ஒருவர், வெறித்தனமாக காதலிப்பதும், அதே வேகத்தில் அந்த காதலை இழக்க துணிவதும் பெரிய விஷயமில்லை. இந்த விஷயத்தை வெகு சீக்கிரம் பிரபுதேவாவே புரிந்து கொள்வார் என்றார்கள்.

தனது காதல் சுலபத்தில் நிறைவேறும் என்ற நயன்தாராவின் எண்ணத்தையும் சமீப நாட்களில் பொசுக்கி விட்டார் ரமலத். தனது ஒவ்வொரு பேட்டியிலும் மாதர் சங்கங்கள் பார்த்துக் கொள்ளும் என்று அவர் சொன்னது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். அவரது அறிக்கைக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. பல்வேறு மாதர் சங்க பிரதிநிதிகள் ரமலத்தை சந்தித்திருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே நயன்தாராவுக்கு எதிரான தங்கள் வியூகங்களை தெளிவுபடுத்தினார்களாம் ரமலத்திடம். இதுவும் நயன்தாராவின் பின்வாங்கலுக்கு காரணமாக அமையக்கூடும்.

சட்டப்படி தங்கள் திருமணத்தை ரிஜிஸ்தர் செய்யாவிட்டாலும், இந்துமத சட்டப்படி மாலை மாற்றிக் கொண்டாலே கணவன் மனைவியாகவே கருதப்படுவார்கள் என்பதால் ரமலத் சம்மதிக்காமல் பிரபுதேவா நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவே முடியாது. அதனாலும் நயன்தாரா விலகி கொள்ளலாம்.

ஆக ரமலத்தின் வாழ்வில் சனிப்பெயர்ச்சி மட்டுமல்ல, நயன்தாரா பெயர்ச்சியும் மிக முக்கியமானதே!

ஷாக் கொடுத்த இயக்குநர்

ஆர்யா படம் தயாரிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் கண்டிப்பான தயாரிப்பாளராக இருப்பார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
ஆர்யா தயாரித்து வரும் படித்துறை படத்தை பாலாவின் உதவியாளர் இயக்கிவருகிறார். இதனால் இயக்குநருக்கு தனி அலுவலகம் போட்டுக் கொடுத்து பட்ஜெட்டையும் ஒதுக்கிக் கொடுத்து சுதந்திரமாக விட்டிருக்கிறார் ஆர்யா.
 
படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் ஆன வரைக்கும் என்ன எடுத்திருக்கிறீர்கள் ...? ரஷ் போட்டுப் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் இது வரை எடுத்தக் காட்சிகளைப் பார்த்த ஆர்யாவுக்கு ஏகப்பட்ட ஷாக். இயக்குநர் சொன்ன கதையின்படி ஒரு காட்சி கூட இல்லையாம். ஏகத்துக்கும் இதனால் டென்ஷனான ஆர்யா, ‘என்ன... இது... சொன்னவற்றில் ஒரு காட்சி கூட இல்லை... சரி, மறுபடியும் படப்பிடிப்புக்குப் போங்க... அடுத்த முறை நான் பார்க்கிற போது என்கிட்ட சொன்ன காட்சிகள் படத்தில் இல்லாவிட்டால் படம் டிராப்தான்... என்று டென்ஷனாக ஆர்யா சொல்ல...’ மறுபடியும் படப்பிடிப்புக்குக் கிளம்பியிருக்கிறார் இயக்குநர்.